ஜோதிகாவை உள்ளே கொண்டு வந்த வெங்கட்பிரபு… கடும் கோபத்தில் பழைய சம்பவத்தை மறக்காத விஜய்…

0
Follow on Google News

நடிகர் விஜய் தற்பொழுது நடித்துவரும் லியோ படத்தை முடித்துவிட்டு, அடுத்த விஜய் நடிக்க இருக்கும் 68வது படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்துள்ளது. விஜய் 68வது படம் வெளியான பின்பு, லியோ படத்தின் மீதான பரபரப்பு மிகப்பெரிய அளவில் குறைந்துவிட்டது. அந்த வகையில் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு நடிகர் விஜய் தரப்பிலும் மற்றும் லியோ பட குழுவினர் தரப்பிலிருந்து ஒரு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது லியோ படம் வெளியாகும் வரை விஜய் நடிக்க இருக்கும் 68வது படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரக்கூடாது என்றும், அது லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் குறைத்து விடுகிறது என வெங்கட் பிரபுவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது விஜய் 68 படம் குறித்த கதை டிஸ்கஷனில் இருந்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படத்தில் எந்த கதாநாயகி நடிப்பது குறித்த டிஸ்கசனையும் நடத்தியுள்ளனர்.

அப்போது நடிகை ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கான தன்னுடைய விருப்பத்தை டிஸ்கஷனில் வெங்கட் பிரபு தெரிவித்த போது, பலரும் ஷாகாகியுள்ளனர். இருந்தும் வேறு எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்று தொடர்ந்து டிஸ்கசன் செய்யப்பட்ட நிலையில். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு என்டர்டெயின்மென்ட் படம் என்பதால், பொதுவாக வெங்கட் பிரபு படம் என்றால் எப்படி கலகலவென்று இருக்குமோ அதே போன்று விஜய் நடிக்க இருக்கும் 68 வது படமும் கலகலவென்று ஃபுல் என்டர்டைன்மென்டாக இருக்க இருக்கிறது.

இந்நிலையில், ஜோதிகா இந்த படத்தின் உள்ளே வந்தால் நன்றாகவும் இருக்கும் என வெங்கட் பிரபு விரும்பியதாகவும், அதனால் ஜோதிகாவிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் நடிகை நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க கமிட்டாகி இருந்தவர் நடிகை ஜோதிகா.

மெர்சல் படத்தில் கமிட்டாவதற்கு முன்பு இயக்குனர் அட்லீயிடம் படத்தின் கதையை கேட்ட நடிகை ஜோதிகா, படத்தில் நடிப்பதற்கான கால் சீட் கொடுத்துள்ளார். மெர்சல் படத்தில் படப்பிப்பில் இரண்டு நாட்கள் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா அவர் நடிக்கும் காட்சிகளில் நடித்து வந்துள்ளார். ஆனால் இயக்குனர் அட்லீயிடம் அவருடைய கதாபாத்திரதத்தில் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியுள்ளார் ஜோதிகா,

அதற்க்கு மாற்றம் செய்தால் கதையில் பல குளறுபடி ஏற்படும் என்று தெரிவித்து ஜோதிகாவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார் அட்லீ. ஆனால் பிடிவாதமாக ஜோதிகா தனக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என ஜோதிகா உறுதியாக இருக்க, அதற்கு படம் வெளியான பின்பு பாருங்கள் நிச்சயம் உங்கள் கேரட்டர் பெரும் பாராட்டை பெரும் என ஜோதிகாவை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார் அட்லீ.

ஆனால் பிடிவாதமாக என்னுடைய கேரக்டரில் மாற்றம் இல்லை என்றால் இந்த படத்தில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்து விட்டு நடிகர் விஜய்யிடம் கூட ஏதும் சொல்லமால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறியுள்ளார் ஜோதிகா.இந்த தகவல் விஜய் கவனத்திற்கு சென்றது, அட்லீயை அழைத்து முழு விவரமும் தெரிந்த கொண்ட விஜய், படத்தில் கமிட்டாவதற்கு முன்பே கதையை கேட்டுவிட்டு தானே கமிட்டானார், பின்பு இப்ப வந்து கதையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் என்ன அர்த்தம் என ஜோதிகா மீது உள்ள கோபத்தை அட்லீயிடம் தெரிவித்துள்ளார் விஜய்.

அதற்கு ஜோதிகாவை சமாதனம் செய்து அழைத்து வரலாம் என அட்லீ தெரிவிக்க, அதெல்லாம் வேண்டாம் இந்த படத்தில் இருந்து வெளியேறுகிறேன் என தெரிவித்துவிட்டு சென்ற பின்பு இனி அவரே திரும்ப வந்தாலும் வேண்டாம், வேறு ஒரு நடிகையை நடிக்க வைங்க என அட்லீக்கு உத்தரவு போட்டுள்ளார் விஜய். இதன் பின்பே ஜோதிகா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகை நித்தியாமேனன் மெர்சல் படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட்பிரபு முயற்சி செய்து வரும் தகவல் விஜய் கவனத்துக்கு சென்றால், நிச்சயம் பழைய சம்பவத்தை மனதில் வைத்து, ஜோதிகா தன்னுடைய படத்தில் என்ட்ரி கொடுப்பதை விஜய் ஏற்று கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.