தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்ற இயக்குனர் ஷங்கர் நிலைமை தற்பொழுது பரிதாபத்துக்கு சென்றுள்ளது. ஜெண்டில்மேன் படத்தில் அறிமுக இயக்குனரான ஷங்கர், அவர் இயக்கிய முதல் படத்தில் மட்டும் தான், அளவான பட்ஜெட்டில் படம் எடுத்திருப்பார், இதன் பின்பு அவர் இயக்கத்தில் வெளியான அணைத்து படங்களும் பிரமாண்டம் என்கிற பெயரில் வீண் செலவு செய்து தயாரிப்பாளர் போட்ட பட்ஜெட்டை தண்டி படத்தின் செலவை அதிகப்படுத்தி வைத்திருப்பர் இயக்குனர் ஷங்கர்.

ரோட்டிற்கு பெயிண்ட் அடிப்பது, பாறைக்கு பெயிண்ட் அடிப்பது என பிரமாண்டம் என்கிற பெயரில் வீண் செலவு செய்து வருகின்றவர் ஷங்கர், ஷங்கர் படம் பெரும்பாலும் பாடல் கட்சிகளுக்கு மட்டும் தான் அதிக செலவு செய்து படமாக்கப்படும், ஆனால் ராஜமௌலி படங்கள் படம் தொடங்கியது முதல் முடியும் வரை பிரமாண்டமாக இருக்கும். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பின்பு பிரமாண்டம் என்கிற பெயரை ஷங்கரிடம் இருந்து தட்டி பறித்து விட்டார் என்றே சொல்லலாம்.

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2.0 மிக பெரிய தோல்வியை தழுவியது, இந்த படத்துக்கு பின்பு ஷங்கர் இயக்கத்தில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை, இதற்கு காரணம் ஷங்கரை வைத்து படம் தயாரிக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை என்றே கூறப்படுகிறது. இடையில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை தொடங்கிய ஷங்கர், அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு அவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக படம் தொடங்கிய வேகத்தில் கைவிடப்பட்டது.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் பேன் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார் ஷங்கர். இதற்கு முன்பு ஷங்கர் இயக்கிய படங்களில் அவர் என்ன சொல்கிறாரரோ அதை உடனே செய்து கொடுப்பார்கள் தயாரிப்பாளர்கள், ஆனால் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2.0 படத்தின் படப்பிடிப்பில் செட் அமைப்பது, மற்றும் துணை நடிகர்களை அழைத்து வருபவர்களிடம் ஷங்கர் கமிஷன் வாங்கியதாக குற்றசாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து தற்பொழுது ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படத்தின் செலவுகளை நேரடியாக தீவிரமாக கண்காணித்து வருகிறது அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இந்நிலையில் ராம்சரண் புதிய படத்தின் ஒரு பாடல் கட்சிக்கு ரூபாய் 10 கோடி பட்ஜெட் என கணக்கிட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர், இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இயக்குனர் தில் ராஜ் உடனே ஷங்கரை தொடர்பு கொண்டு இதெல்லாம் வேண்டாம் பட்ஜெட் க்குள் படம் எடுங்க, இல்லை என்றால் உங்கள் சம்பளத்தில் கை வைக்க வேண்டியது வரும் என எச்சரித்துள்ளார் தில் ராஜ், மேலும் தன்னுடைய தயாரிப்பு பணிகளை கவனித்து வருகின்றவர்களிடம், ஒரு பாடலுக்கு ரூபாய் 10 கோடி என்பதெல்லாம், தமிழில் எதாவது இளிச்சவாயன் தயாரிப்பாளர் இருப்பார்கள் அவரிடம் ஷங்கர் விளையாடட்டும், நம்மிடம் வேண்டாம் என தில் ராஜ் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே தன்னுடைய குடும்பத்தில் மூத்த மகள் திருமணம் வாழ்க்கையில் கடும் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்து வரும் இயக்குனர் ஷங்கர், தற்பொழுது சினிமாவிலும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை, தனக்கு உரிய மரியாதை இல்லை என்பதை நினைத்து வேதனையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது,

ரஜினிகாந்த் அதிரடி… சினிமாவில் இனி நடிப்பதில்லை … தீடிர் அமெரிக்க பயணம்..! என்ன காரணம் தெரியுமா.?