ஷங்கர் செய்த சேட்டை… பலத்த அடிவாங்கியுள்ள ஷங்கர் இன்றைய பரிதாப நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா.?

0
Follow on Google News

பிரமாண்ட இயக்குனர் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குனர் ஷங்கர் வாழ்க்கை தற்பொழுது பரிதாப நிலையில் உள்ளது.ஜெண்டில்மேன் படத்தில் இயக்குனராக அறிமுகம் தொடங்கி ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான எந்திரன் 2.0 வரை தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனராக உச்சத்தில் இருந்து வந்த இயக்குனர் ஷங்கர் தற்பொழுது அடி மேல் அடி வாங்கி கொண்டிருப்பதை அறிந்த தமிழ் சினிமா உலகம் பரிதாப படுகிறது.

இயக்குனர் ஷங்கர் எந்த ஒரு படமும் பட்ஜெட்க்குள் எடுத்து முடிக்கமாட்டார். முதல் படம் ஜெண்டில்மேன் பட்ஜெட்க்கு மேல் படம் எடுத்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமேனன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஷங்கர் அவருடைய சொந்த இயக்கத்தில் எந்த ஒரு படமும் தயாரிக்கவில்லை, சிறிய பட்ஜெட் படங்களை மட்டும் தயாரித்த ஷங்கர்.

அவருடைய இயக்கத்தை மட்டும் அடுத்த தயாரிப்பாளர்களை வைத்து அதிக செலவில் பிரமாண்டமாக எடுத்தார். தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் என்று வலம் வந்த ஷங்கர் பாகுபாலி படத்திற்கு பின்பு அந்த பிரமாண்டம் என்கிற பெயரை ராஜமௌலி தட்டி பறித்து சென்று விட்டார். இதன் பின்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 எதிர்ப்பார்த்த வசூலை பெறாமல் படு தோல்வியை தழுவியது. இதன் பின்பு ஷங்கர் இயக்கத்தில் படம் எடுக்க தயாரிப்பாளர்கள் பின்வாங்கினர்.

ஒருவழியாக நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2.0 படத்தை தொடங்கினார் ஷங்கர், ஆனால் படத்தின் படப்பிடிப்பின் போது கமல்ஹாசன் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படம் பாதியிலே நிற்கிறது. இதன் பின்பு காத்திருந்த ஷங்கர், தெலுங்கு சினிமா பக்கம் சென்றவர் தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார், இந்த பாடம் தான் ஷங்கரின் சினிமா எதிர்காலத்தை முடிவு செய்யும் படமாக கருதுகிறது.

இப்படி தொடர்ந்து சினிமாவில் அடி மேல் அடி வாங்கி வரும் ஷங்கர், குடும்பத்திலும் பிரச்சனை மேல் பிரச்சனையை சந்தித்து வருகிறார், மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் அவருடைய கணவரின் தவறான நடவடிக்கைகளால், தற்பொழுது விவாகரத்து பெரும் நிலைக்கு வந்துள்ளது, அடுத்தது இரண்டாவது மகள் அதிதி சினிமாவில் நடித்து வருகிறார், அடுத்த படம் நடிக்க வேண்டாம் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மகள் கேட்பதாக இல்லை, அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து வருகிறார், இதனால் குடும்பத்திலும் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் ஷங்கர், ஒரே நேரத்தில் சினிமா மற்றும் குடும்பத்திலும் அடி மேல் அடிவாங்கி வருவதை பார்த்த சினிமா துறையினர் பரிதாப பட்டு வருவது குறிப்பிடதக்கது.

என் மகளிடமே உன் சில்மிஷத்தை காட்டுறியா… தனுஷை விரட்டியடித்த போனிகபூர்..! என்ன நடந்தது தெரியுமா..