கமல்ஹாசனால் ஏற்பட்ட பிரச்சனை… தமிழ்நாட்டிலிருந்து வெளியேறிய ஷங்கர்.. என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : வித்தியாசமான கதைக்களத்தை கையிலெடுத்து ஜென்டில்மேன் திரைப்படத்தின்மூலம் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்துவைத்தவர் டைரக்டர் ஷங்கர். அவரது திரைப்படங்களின் கதைக்கரு எவ்வளவு பிரமாண்டமாக இருக்குமோ அதைவிட அவர் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் பிரம்மாண்டமாக இருக்கும்.

தமிழ் சினிமாவை உலகத்தரத்தில் உயர்த்தியதில் ஷங்கருக்கும் உண்டு. அவரது அதிரிபுதிரி ஹிட் படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமலஹாசனை வைத்து எந்த நேரத்தில் தொடங்கினாரோ தெரியவில்லை. பட ஷூட்டிங் ஆரம்பித்த நாளில் இருந்தே சர்ச்சைகளும் பிரச்சினைகளும் டைரக்டர் ஷங்கரை சூழத்தொடங்கியது.

தனது கேரியரில் மட்டுமல்லாமல் குடும்பத்திலும் தொடர் பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கிறார் ஷங்கர். அவரது மூத்த மகள் திருமணம் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நொந்துபோயிருந்த ஷங்கருக்கு இளையமகள் அதிதி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். முதலில் ஒரு படம் மட்டும்தான் என கூறியவர் தனது அப்பாவான ஷங்கரின் சொல்லை மீறி அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவருவது ஷங்கருக்கு மன உளைச்சலை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தமிழ்நாடே வேண்டாம் என ஆந்திரா பக்கமாக சென்றுள்ள டைரக்டர் ஷங்கர் ராம்சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படைப்பை அடுத்து பாலிவுட்டில் அந்நியன் ரிமேக்கின் மூலம் நுழைய உள்ளார். இதில் நடிக்க அக்சய்குமாரிடம் பேசப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு படங்களையும் இயக்கிவிட்டு தமிழ்நாட்டுப்பக்கம் வருவார் என எதிர்பார்த்தால் மீண்டும் தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து படம் பண்ண போவதாக தெரிவித்துள்ளார். கமலாலும் தனது பெண்குழந்தைகளாலும் ஏற்பட்ட பிரச்சினைகளால் மனஉளைச்சலில் இருக்கும் ஷங்கர் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு சென்னைக்கு வரவே போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்மா ப்ளீஸ் வேண்டாம்…. கையை பிடித்து கதறிய இரண்டு மகன்கள்… தாய் ஐஸ்வர்யா என்ன செய்தார் தெரியுமா.?