கமல்ஹாசனை நேரில் அழைத்து அசிங்கப்படுத்திய ராஜமௌலி..! செம்ம டென்ஷனில் கமல் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் கமல்ஹாசன் தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் தொடங்கி தற்பொழுது 67 வயதிலும் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்த போதும் அந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதே போன்று கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க தொடங்கியது முதல் தற்பொழுது வரை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக கமல்ஹாசன் இருந்து வருகிறார்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். மேலும் தற்பொழுது முழு வீச்சில் படம் தயாரிக்கும் வேலைகளில் இறங்கியுள்ள கமல்ஹாசன், பல இயக்குனர்களை நேரில் அழைத்து கதை கேட்டு வருகிறார். அதில் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து. அந்த படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து சொந்தமாக தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.

இந்நிலையில் தற்பொழுது இந்தியாவின் முதன்மை இயக்குனராக பேசப்படும் ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் RRR, இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்து வசூலை குவித்தது. பாகுபலி, RRR என மிக பெரிய வெற்றியை கொடுத்த ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அவளோடு எதிர்ப்பது கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ராஜமௌலி படம் என்றாலே 2 வருடம் வரை படப்பிடிப்பு நடக்கும்.

இந்நிலையில் ராஜமௌலி அடுத்த படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்துள்ளது. படத்தின் கதை குறித்து பேச கமல்ஹாசனிடம் நேரமும் கேட்டிருந்தார் ராஜமௌலி. இதனை தொடர்ந்து, சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசனை நேரில் அழைத்து சந்தித்துள்ளார் ராஜமௌலி என்று கூறப்படுகிறது. அப்போது புதிய படத்தின் கதையை மிக சுருக்கமாக தெரிவித்துள்ளார் ராஜமௌலி. படத்தின் கதை கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்து போனது.

கதையின் இடம்பெற்றுள்ள ஹீரோ கதாபாத்திரங்கள் பற்றி அதிகம் பேசாமல். மற்றொரு கதாபாத்திரம் பற்றி மட்டும் அதிகமாக விளக்கம் கொடுத்து கமல்ஹாசனிடம் பேசியுள்ளார் ராஜமௌலி. அந்த கதாபாத்திரம் என்பது RRR படத்தில் அஜய் தேவ்கன் போன்ற கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க குறைந்த நாள் கால் சீட் கொடுத்தால் போதும் என்றும் தெரிவித்த ராஜமௌலி. படத்தில் சிறிது நேரம் இந்த கதாபாத்திரம் இடம்பெற்றாலும் முக்கியமான பாத்திரம் என்றும் ராஜமௌலி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஹீரோ பாத்திரம் குறித்து கமல்ஹாசன் கேட்க அதில் மகேஷ் பாபு நடிக்கிறார் என இயக்குனர் ராஜமௌலி தெரிவிக்க செம்ம டென்ஷன் ஆன கமல்ஹாசன், நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று தெரிவித்துவிட்டு கோபத்தில் அதிகம் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனை கதை சொல்ல நேரில் அழைத்து அசிக்கப்படுத்துவது போன்று அமைத்துள்ளது ராஜமௌலியின் இந்த செயல் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

ரஜினிக்கு கிட்னி தானம் செய்தவர்க்கே இந்த நிலைமையா.? நன்றி உணர்வு இல்லாத ரஜினி குடும்பம்.. என்ன தெரியுமா.?