பாலா மனைவியுடன் அஜால் குஜால் செய்த அந்த எம்பி யார் தெரியுமா.? புட்டு புட்டு வைத்து பிரபலம்…

0
Follow on Google News

இயக்குனர் பாலா அவரது மனைவி முத்துமலர் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் ரகசியமாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விவாகரத்து பெற்றுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட உச்சக்கட்ட மோதல் காரணமாக கடந்த நான்கு வருடமாக இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர்கள் பிரிவுக்கான காரணமும் வெளியாகியுள்ளது மதுரை அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துமலர் இவர் கல்லூரியில் படிக்கும் போதே அதிமுக முக்கிய புள்ளியின் மகனுடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முத்துமலர் வீட்டில் இயக்குனர் பாலாவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்துள்ளனர். சினிமா மீது மோகம் கொண்ட முத்துமலர் சினிமா துறையை சேர்ந்தவர் பாலா என்பதால் மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டார்.

மகிழ்ச்சியுடன் சென்ற பாலா – முத்துமலர் இல்லற வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து கல்லூரி காலத்தில் தான் நெருங்கி பழகிய அந்த அரசியவாதியின் மகனிடம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு நெருங்கி பழகி வந்துள்ளார் முத்துமலர் என கூறப்படுகிறது. அடிக்கடி முத்துமலர் அந்த முக்கிய அரசியல்வாதியின் மகனுடன் வெளிநாடு சென்றுள்ளார். இதனால் பாலா – முத்துமலர் இடையே மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது.

குடும்பத்தினர் மத்தியில் நடந்த இவர்களின் பஞ்சாயத்தில் பாலாவுடன் இணைந்து வாழ விருப்பம் இல்லை என திட்டவட்டமாக மறுத்து விட்டார் முத்துமலர். இதனை தொடர்ந்து மனைவியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் அப்போது இருந்த ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர் மகன் என்பதால் சற்று அமைதியாக இருந்து வந்த இயக்குனர் பாலா ஆட்சி மாற்றத்துக்கு பின்பு விவாகரத்து வழக்கு பதிவு செய்து பாலா – முத்துமலர் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்துமலர் உடன் நெருங்கி பழகிய மதுரையை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளியின் அந்த மகன் யார் என பலர் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் K.ராஜன், இது குறித்த ரகசியங்களை உடைத்து பேசியுள்ளார், அவர் சமீபத்தில் பேசிய ஒரு வீடியோவில், பாலா மனைவி முத்துமலர் முக்கிய அரசியல் கட்சி எம்பி ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும் அவருடன் அடிக்கடி டெல்லி சென்று அங்கே அவர் உடன் தங்கியுள்ளார் என்பதை கேள்விபட்டுளேன் என்று K.ராஜன் பேசியிருந்தார்.

ஆனால் அந்த எம்பி யார் என்கிற பெயரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் ஏற்கனவே மதுரையை சேர்ந்த அதிமுக முக்கிய அரசியல் தலைவரின் மகனுடன் முத்துமலர் நெருக்கமாக இருந்து வருகிறார் என தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, தற்போது எம்பி ஒருவர் உடன் அடிக்கடி முத்துமலர் டெல்லி செல்வார் என தயாரிப்பாளர் K.ராஜன் தெரிவித்துள்ளது. யார் அந்த அரசியல் வாரிசு எம்பி என்கிற குழப்பம் நீடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.