தடம்மாறிய மனைவி பற்றிய வேதனையை சிவகுமாரிடம் கொட்டி தீர்த்த பாலா.! மனைவி பற்றி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின்பு, இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா, இந்த படத்தை சூர்யா – ஜோதிகா சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது, படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் நடக்க இருக்க இருப்பதால் அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்துக்கான ஆலோசனை சந்திப்பு சமீபத்தில் நடிகர் சூர்யா வீட்டில் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு பாலா அவரது மனைவியை விவாகரத்து செய்வதாக தீர்ப்பு வருவதற்கு முன்பு நடைபெற்றுள்ளது. பாலா சுமார் கடந்த நான்கு வருடங்களாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதும், விரைவில் விவாகரத்து பெற இருப்பதும் நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியும் என கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா வீட்டில் நடந்த புதிய படத்துக்கான ஆலோசனையின் போது இயக்குனர் பாலாவை தனியாக அழைத்து சிவகுமார் பேசியுள்ளார், அப்போது பாலா மற்றும் அவரது மனைவி உடனான பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார், பாலா மகள் வாழ்க்கையை கருத்தில் கொண்டு மீண்டும் மனைவி முத்துமலர் உடன் இணைந்து வாழ வேண்டும் என மணிக்கணக்கில் பாலாவுக்கு அட்வைஸ் செய்துள்ளார் சிவகுமார்.

மேலும் பாலா மனைவி முத்துமலரை அழைத்து தான் பேசி சரி செய்வதாக உறுதியளித்துள்ளார் சிவகுமார். ஆனால் இயக்குனர் பாலா திட்டவட்டமாக மறுத்து விட்டதாக கூறப்படுகிறது, மேலும் தனது மனைவி தடம்மாறி அரசியல் முக்கிய புள்ளி ஒருவரின் மகனிடம் கடந்த சில வருடங்களாக நெருங்கிய தொடர்பில் இருப்பது குறித்து தனக்கு அறிவுரை வழங்கிய நடிகர் சிவகுமாரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார் பாலா.

இதற்கு நடந்தது நடந்து போச்சு இனி எந்த தப்பு நடக்காமல் பேசி இருவரும் இணைந்து வாழ வேண்டும் அதற்கான முயற்சியை நான் செய்கிறேன் என சிவகுமார் பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு பாலா நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மனைவி அந்த அரசியல் புள்ளி மகனுடன் நெருங்கி பழகுவதால் மனைவிக்கு தனக்கும் நடந்த பிரச்சனையால் இரண்டு குடும்பத்தினர் மத்தியில் நடந்த பஞ்சாயத்தில் என்னுடன் வாழ பிடிக்கவில்லை என மனைவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்றும்,

இதன் பின்பு தான் இருவரும் கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம், இனி இணைந்து வாழ்வதற்கு எனக்கும் விருப்பம் இல்லை, விவாகரத்து தான் சரியான தீர்வு என தெரிவித்த இயக்குனர் பாலா, தயவு செய்து என்னை இந்த விஷயத்தில் கட்டாய படுத்த வேண்டாம் அப்பா என சிவகுமாரிடம் இயக்குனர் பாலா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாலாவை அவரது மனைவியுடன் இணைந்து வைக்க சிவகுமார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது கூறிப்பிடத்தக்கது.

மனைவி பேச்சை கேட்டு மார்க்கெட் இழந்த சூர்யா…புதிய படத்தை வாங்குவதில் தியேட்டர்கள் தயக்கம்… தேவையா இது.?