உனக்கு என்ன மாதவிடையா.? நடிகர் சூர்யாவை பலர் முன்னிலையில் அசிங்க படுத்திய பாலா..

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் தொடங்கப்பட்ட வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வந்தார். முதல் இரண்டு செட்யூல்களில் நடித்த சூர்யா, அதன் பின்னர் இயக்குனர் பாலா உடனான பிரச்சனையால் படத்திலிருந்து விலகி விட்டார். மேலும், தற்போது இயக்குனர் சிவாவின் கங்குவா படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் சுதாகொங்கரா இயக்க உள்ள படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை வைத்து நந்தா, பிதாமகன்உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர, சொல்லப்போனால் நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் பாலா தான் என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகுவதற்கு காரணம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

சூரியா – பாலா இருவருக்கும் இடையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. நந்தா படத்தில் சூர்யாவை எப்படி கையாண்டாரோ அதேபோன்றுதான் வணங்கான் படத்திலும் கையாண்டு உள்ளார் பாலா. ஆனால் சூர்யா நந்தா படத்தில் இருந்ததை விட தற்போது பல மடங்கு உயரத்துக்கு சென்றுள்ளதால் பாலாவின் நடவடிக்கை மீது சூர்யாவுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி உரசல் ஏற்பட்டு வந்த வந்துள்ளது.

பாலா மீது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத சூர்யா, பல நேரங்களில் படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குனரை மிக கடுமையாக வும், அநாகரீகமாகவும் திட்டி தீர்த்து உள்ளார் சூர்யா. இது பாலாவை ஜாடை மாடையாக சூர்யா திட்டுவது படப் படிப்பில் இருந்த அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். மேலும் உதவி இயக்குனரை சூர்யா திட்டுவதை பலமுறை கவனித்த பாலா அதைக் கண்டும் காணாமலும் சென்றுள்ளார். ஆனால் பாலா நம்மைத்தான் ஜாடை மாலையாக சூர்யா திட்டுகிறார் என்று நன்கு அறிந்துள்ளார்.

இந்நிலையில் சூர்யாவை திட்டமிட்டு வெச்சு செய்யும் நோக்கில் படப்பிடிப்பில் தளத்தில் உச்சி வெயிலில் சூர்யா ஓடும் காட்சியை மீண்டும் மீண்டும் ரீ டேக் எடுத்துள்ளார் பாலா, ஒரு கட்டத்தில் இதுக்கு மேல ஓட முடியாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்தே சூர்யா ஓடிவிட்டார், இதன் பின்பு வணங்கான் படம் கைவிடப்பட்டது.

கடந்த சில வருடங்களாகவே சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா இயக்கிய வர்மா படம் கிடப்பில் போடப்பட்டது மற்றும் அவரது மனைவி மலர் விவாகரத்து என தொடர் பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா, வணங்கான் படத்தின் மூலம் கம் பேக் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் திடீரென இருவர் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படத்திலிருந்து சூர்யா விலகவே, அருண் விஜய் வைத்து படத்தை எடுத்து முடித்தார். தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே பத்திரிக்கையாளர் சபைர், வணங்கானில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே என்ன தகராறு என்பதை பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது நடிகர் சூர்யா, சினிமாவில் இப்போது வளர்ந்து விட்டார். ஆனால் இயக்குனர் பாலா, நந்தா படத்தில் சூர்யாவை நடத்தியது போலவே இந்தப் படத்திலும் நடத்தி இருக்கிறார். சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவை கடுமையாக வேலை வாங்கிய பாலா.

மேலும் வணங்கான் படப்பிடிப்பின் போது, சூர்யா தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பாலாவிடம் தெரிவித்துள்ளார்,அதற்கு பாலா உனக்கு என பீரியட்சா என் பாலா கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னனி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யாவை படப்பிடிப்பு தளத்தில் பலர் முன்னிலையில் உனக்கு என்ன பீரியட்சா என பல கேட்டது, இதுக்கு மேல சூர்யாவை யாரும் அசிங்கப்படுத்தி இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு அமைந்த இந்த சம்பவத்துக்கு பின்பு தான்,சூர்யா – பாலா இருவருக்கும் இடையில் மோதல் உச்சகட்டத்தை அடைத்திருக்கும் என கூறப்படுகிறது.