ஷாருக்கானுக்கு ஆப்பு வைத்த அட்லி… சொதப்பிய அனிருத்… கடுப்பான ஷாருக்கான்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்தார். தற்போது இவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதுவும் முதல் படமே பாலிவுட் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்துள்ளார். அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படம் திரைக்கு வர ரெடியாக உள்ளது.

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த ஜனவரியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இந்தப் படத்தின் மூலம் தொய்வடைந்திருந்த பாலிவுட்டை ஷாருக்கான் மீட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின்மூலம் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா, பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அவருடன் யோகிபாபு, விஜய் சேதுபதி, பிரியா மணி உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளராக அனிருத்தும் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் பாடல்கள் எதுவும் சரிவர ரசிகர்களை ஈர்க்கவில்லை.

ஜவான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை முதலில் படக்குழு வெளியிட்டு இருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்பாடலை மூன்று மொழிகளிலுமே அனிருத் தான் பாடி இருந்தார். அந்த சமயம் அந்த பாடலின் டியூன் மாநாடு படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த வாய்ஸ் ஆஃப் யூனிட்டி என்கிற தீம் மியூசிக்கில் இருந்து சுட்டு தான் அனிருத் போட்டுள்ளதாக சில ஒப்பிட்டனர்.

ஒரு சிலரோ இது வலிமை படத்தில் இடம்பெறும் நாங்க வேற மாரி பாடலுக்காக யுவன் இசையமைத்த டியூன் என கூறுகின்றனர். இதுமட்டுமின்றி தமிழில் வெளியான முதல் பாடலை அனிருத் பாடியுள்ள நிலையிலும் டப்பிங் பாடலை போல இருப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் பாடலே பல சர்ச்சையில் சிக்கி வரவேற்பு இல்லாமல் போனது.

இந்நிலையில் இரண்டாவது பாடல் ரொமான்டிக் பாடலாக வெளிவந்தது. அந்தப் பாடலும் சரிவர ஹிட் அடிக்கவில்லை. சொல்லப்போனால் அனிருத்துக்கு ஹிந்தி வொர்க்கவுட் ஆகவில்லை. தற்போது பாடல்கள் சரிவர போகாததால் ஷாருக்கான் மிகவும் கடுப்பாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அதாவது இன்றைய சினிமாவில் ஒரு படம் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி வருவது அந்த படம் வெளியாவதற்கு முன்பு ரிலீஸ் ஆகும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தான்.

அப்படி தான் ஜெயிலர் படத்திற்கு காவலா, புஸ்பா படத்தில் இடம்பெற்ற ஓ.. சொல்றியா மாமா, ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த பதான் படத்தில் இடம்பெற்ற பேசாராம் போன்ற பாடல்கள் அந்த படங்களுக்கு மிக பெரிய ப்ரோமோஷனாக அமைத்தது, ஆனால் ஜவான் படத்தில் அனிருந்து இசையில் வெளியாகியுள்ள பாடல், அந்த படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் மொக்கையாக அமைத்துள்ளது,

இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் அனிருத் என்ட்ரி என்பது, ஆரம்பவே பலத்த அடி வாங்கும் வகையில் அமைத்துள்ளது, இந்நிலையில் இதனால் கடும் அப்செட்டில் இருந்து வரும் ஷாருக்கான், இயக்குனர் அட்லீ மீது கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.