பிடிவாதம் பிடித்த அட்லீ… முகத்தில் எறிந்த விஜய் சேதுபதி…. படப்பிடிப்பில் எதை கொண்டு எறிந்தார் தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி, ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானார். அவர் இயக்கத்தில் வெளியான முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார் இயக்குனர் அட்லி. பழைய படத்தின் கதையை திருடுவது, ஆங்கில படங்களில் இருந்து காட்சிகளை திருடுவது என்கிற விமர்சனம் அட்லி மீது இருந்தாலும், அதை பெரிதாக அவர் பொருட்படுத்துவது கிடையாது.

தற்பொழுது, இந்தியில் நடிகர் ஷாருகான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கின் காரணமாக கைது செய்யப்பட்டார். இதனால் சில நாட்கள் ஷாருக்கானால் படப்பிடிப்பில் பங்கேற்க்க முடியவில்லை. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக ஜவான் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இப்படி பல தடைகளை சந்தித்த படம் ஜவான்.

இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் முதல் கட்ட படப்பிடிப்பு ஷாருக்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா திருமணம் முடிந்த அடுத்த ஒரு மாதத்தில் மும்பையில் ஜவான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஜவான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க வைத்தார் அட்லி. இது இந்தியில் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு மிக பெரிய வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

ஜவான் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. நடிகை தீபிகா படுகோனும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் உதவி இயக்குனர்கள் விஜய் சேதுபதியிடம் காட்சிகளை விளக்கி கூறியுள்ளார்கள். இதற்கு விஜய் சேதுபதி இந்த காட்சிகளில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை, அதனால் காட்சிகளில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அட்லீ கவனத்துக்கு சென்றுள்ளது, ஆனால் அட்லி முடியாது என மறுத்துவிட்டார் என்கிற பதில் உதவி இயக்குனர் மூலம் விஜய் சேதுபதியின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் சேதுபதி திட்டவட்டமாக இந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்க, மீண்டும் உதவி இயக்குனர்கள் அட்லியை அணுகியுள்ளனர், அதற்கு அட்லீ கோபத்துடன் என்னுடைய படத்தில் எந்த ஒரு காட்சியும் நடிகர்களுக்கு ஏற்றார் போல் மாற்ற முடியாது.

இதில் நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் விஜய் சேதுபதியை செய்தால் போதும், அவர் இயக்குனர் வேலையை பார்க்க வேண்டாம் என அட்லீ கொந்தளிக்க, சார் இயக்குனர் எந்த ஒரு காட்சியையும் மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என விஜய்சேதுபதியிடம் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். உடனே கோவப்பட்ட விஜய் சேதுபதி கையில் இருந்த டயலாக் பேப்பரை தூக்கி எறிந்துள்ளார்.

அந்த டயலாக் பேப்பர் அருகில் இருந்த உதவி இயக்குனர் ஒருவர் முகத்தில் பட்டு கீழே விழுந்து உள்ளது. இதை அங்கே படப்பிடிப்பில் கலந்து கொண்ட சுமார் 650 ஆர்டிஸ்ட்களும் பார்த்து நிலை குலைந்து போய் உள்ளார்கள். மேலும் இந்த சம்பவத்தை கண்ட இந்தி நடிகை தீபிகாபடுகோன் நேராக சென்று கேரவனுக்குள் அமர்ந்து கொண்டார். இதனால் சுமார் அரை நாள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்பு இயக்குனர் அட்லி மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இடையில் உதவி இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் மதிய இடைவேளைக்கு பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இருந்தும் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சேதுபதியை என்ட்ரி கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் அட்லீ, அவரிடம் விஜய் சேதுபதி இப்படி நடந்து கொள்ளலாமா? என்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.