துப்பறிவாளன் 2 படப்பிடிப்பில் தாமதம்… அறிவிப்பை வெளியிட்ட விஷால்!

0
Follow on Google News

நடிகர் விஷால் லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளார்.
துப்பறிவாளன் வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் மற்றும் விஷால் இணைந்து உருவாக்க லண்டனுக்கு சென்றனர். அங்கு படப்பிடிப்பு நடந்த போதே இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார்.

இதனால் அந்த படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதையடுத்து விஷாலே மிச்சப் படத்தை இயக்கபோவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வருடமாக இது சம்மந்தமாக அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் இப்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்புப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் மொத்தமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் விஷால். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள உள்ளார்.