இயற்கை, பேராண்மை, பூலோகம் போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் மரணம்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் இயற்கை, பேராண்மை, பூலோகம் தற்போது லாபம் போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் தான் எஸ்பி ஜனநாதன் கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் எஸ்பி ஜனநாதன். 61வயதை கடந்தும் இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சினிமா மீது கொண்ட மோகத்தால் திருமணம் செய்து கொள்ளவில்லை. லாபம் என்ற திரைப்படத்தின் எடிட்டிங்கில் வேலை ஈடுபட்டு இருந்தவர்,

ஓய்வு நேரத்தில் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், நீண்ட நேரம் கழித்து அவர் வராத காரணத்தினால், உதவியாளர் ஒருவரை அனுப்பி பார்த்து வருமாறு கூறினர்.ஜனநாதன் வீட்டிற்குச் சென்ற உதவியாளர் அதிர்ச்சியடைந்தார். சுயநினைவே இல்லாமல் கிடந்துள்ளார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர்.

அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மூளைச்சலவை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்கள் கூறினர். நேற்று காலை திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திரைத்துறையினரும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தும் விதத்தில் இவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டு இன்று தகனம் செய்யப்பட உள்ளது.இவரது இறப்புக்கு இயக்குனர் சமுத்திரக்கனி, பா ரஞ்சித், நடிகர் ஆர்யா, விஜய் சேதுபதி, ஆரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.