என் மரியாதையை கெடுக்க நான் விரும்பவில்லை..! கோபத்துடன் பா.ரஞ்சித் படத்தில் இருந்து அதிரடியாக விலகிய இசைஞானி.. காரணம் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

அட்டகத்தி படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பா.ரஞ்சித் அடுத்து அவர் இயக்கிய இரண்டாவது படம் மெட்ராஸ் வெற்றியை பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கினார். தனது படத்தில் ஒரு சில சமூகத்தை சீண்டும் விதத்தில் காட்சிகளை வைத்து அவர்களை வம்புக்கு இழுப்பார் பா.ரஞ்சித், இதற்காக தனது கருத்தை அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களை பகடைக்காயாக பயன்படுத்தி திரையில் வெளிப்படுத்துவார்.

இதே போன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களை இயக்கிய பா.ரஞ்சித் எழுதிய பல வசனங்களை ரஜினிகாந்த் புறக்கணித்ததாக கூறபடுகிறது, இது ரஜினிகாந்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் தனது கருத்தை திணிக்க முயன்ற பா.ரஞ்சித் முயற்சி தோல்வியை தழுவியது, அனாலும் கூட அந்த படத்தில் சில குறிப்பிட்ட சமூகத்தை சீண்டுவது போன்று குறியீடுகளை காட்சிகளில் வெளிப்படுத்தி அவர்களை சீண்டும் வகையில் படம் எடுத்திருப்பார் பா.ரஞ்சித்.

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கிய பின்பு, பொது மேடைகளில் பேச தொடங்கிய பா.ரஞ்சித் தொடர்ந்து சாதி குறித்த பேச்சால் அவர் ஒரு சாதியின் வட்டத்துக்குள் அடைக்கப்பட்டார். மேலும் தமிழ் மன்னர் ராஜேந்திர சோழன் பற்றி இழிவாகவும் கேவலமாகவும் பா.ரஞ்சித் பேசியது அவரின் ஆணவத்தின் உச்சமாக இது பார்க்கப்பட்டது. இது அவருக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் ரஞ்சித் படங்களில் நடித்தால் தாங்களும் அந்த குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடங்கி மேலும் ஒரு சில குறிப்பிட்ட சமூக மக்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் நடிக்க தயங்கி வருகின்றனர், சமீபத்தில் நடிகர் விஜய் , இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களிடம் கதை கேட்டுவிட்டு பின் எதற்கு தேவையில்லாதா வம்பு என பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க மறுத்து அவரை புறக்கணித்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த பின்பு தன்னுடைய மார்க்கெட் சரிவை நோக்கி சென்று விட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்ததாக சமீபத்தில் திரை துறையை சேர்ந்த முக்கிய பிரபலம் தெரிவித்தார் இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்த காதல் சப்ஜெக்ட் படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கும் இசைஞானி இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பா.ரஞ்சித் புதிய படத்தில் இருந்து இளையராஜா விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இந்நிலையில் புதிய படம் குறித்து பா.ரஞ்சித் உடன் நடத்திய கலந்துரையாடலுக்கு பின்பு தான் இளையராஜா இந்த படத்தில் இருந்து விளக்கியுள்ளதாக கூறபடுகிறது, எனக்கென்று ஒரு மரியாதை அணைத்து தரப்பு மக்களிடம் இருக்கிறது அதை தான் கெடுத்துக்க விரும்பவில்லை என இளையராஜா முடிவு செய்துள்ளதாகவும்.

மேலும் பா.ரஞ்சித் தனது கருத்தை இசைஞானி இசை மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முயற்ச்சி செய்வதாகவும் அதற்கு பகடை காயாக தான் விரும்பவில்லை என்றும், எத்தனை கோடி கொடுத்தாலும் இது போன்ற படங்களில் இசையமைக்க மாட்டேன் என இளையராஜா தரப்பில் இருந்து திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பா ரஞ்சித் புதிய படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்க போவதில்லை என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது.