மாயா சாவகாசம் உனக்கு வேண்டாம்…மகள் ஜோவிகாவை எச்சரித்த வனிதா..

0
Follow on Google News

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது எட்டாவது வரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பொறுமையாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது.

ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வரப்போகும் வைல்ட் கார்ட் என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான். 50 நாட்கள் நிறைவடைந்திருக்கும் இந்நிலையில் பைனலில் யார் யார் நிற்பார்கள் என கொஞ்சமும் கணிக்க முடியவில்லை என ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் வனிதாவின் மகளும் ஒருவர்.

வனிதாவிற்கு எந்த அளவிற்கு விமர்சனம் இருந்ததோ அதே அளவு ஜோவிகாவிற்கும் பல விமர்சனங்கள் குவிந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் ஜோவிகா, பிக் பாஸ் வீட்டில் பெரும்பாலும் சாப்பிடுவது, தூங்குவது, வழுக்கி விழுவது என்று தான் இருந்து வருகிறார். இந்த சீசன் ஆரம்பித்த முதல் வாரத்திலேயே படிப்பு விஷயத்தில் இவருக்கும் விசித்ராவிற்கும் ஒரு வாக்குவாதமே சென்றது. அப்போது ஜோவிகா, எனக்கு படிப்பு வராது ஆனால், எனக்கு கார் டயரை கழட்டி ஜாக்கி மாட்ட தெரியும் என்று சம்மந்தம் இல்லாமல் பேசினார்.

மேலும், இதுவரை பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கை இதுவரை ஜோவிகா படித்தது கூட கிடையாது. ஆனால், மற்றவர்களிடம் மட்டும் வீராப்பு பேசி வருகிறார் ஜோவிகா. ஆரம்பத்தில் ஜோவிகா நன்றாக தான் விளையாடி வந்தார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்து இவர் மற்றறவர்களை மரியாதை இல்லாமல் நடத்தி வந்தார். அதிலும் அர்ச்சனாவை வயது வித்யாசம் பார்க்காமல் வாடி போடி என்று சொன்னதோடு அவரது மன உலைச்சலை கேலி செய்யும் வகையில் மெடிக்கல் ரூம் போ என்று மிகவும் தரக்குறைவாக பேசி இருந்தார்.

இப்படியாக இருக்கும் நிலையில் இந்த சீசனிலும் பி ஆர் டீம் பற்றி பலர் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலே உள்ளே வீடியோ ஒற்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பூர்ணிமா டைனிங் ஹாலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது மாயாவிடம் எனக்கு ஒரு டீசர்ட் அனுப்பி இருக்காங்க என்று சொல்ல, அந்த பேச்சுவார்த்தையில் மாயா அப்படியே நிறுத்தி நீங்கள் எதுவும் பேச வேண்டாம். நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க என்று கூறுகிறார்.

அதற்கு சரி என்று பூர்ணிமா சொல்ல அதற்கு மாயா உங்களுக்கு இந்த டி-ஷர்ட் எப்போது வந்தது என்று கேட்கிறார். அதற்கு பூர்ணிமா கடந்த வாரத்தில் வந்தது என்று சொல்கிறார். அதற்கு மாயா இது ஏற்கனவே எத்தனை வாரங்களுக்கு முன்பு உள்ளேய டி-ஷர்டோ தெரியவில்லை. சில நேரங்களில் நீங்கள் அவர்கள் அனுப்பிய வாரத்தில் விளையாட்டு சரியில்லாமல் இருந்திருக்கலாம் அதை குறித்து கூட உங்களுக்கு இந்த மாதிரி வாசகம் அனுப்பி இருக்கலாம் என்று மாயா சொல்ல அதற்கு பூர்ணிமாவும் ஆமாம் என்று சொல்கிறார்.

இப்படியாக போட்டியாளர்களுக்குள் ஒரு பரபரப்பு இருக்கும் நிலையில் இவர்கள் போடும் டி-ஷர்டில் இருக்கும் வசனங்களும் இவர்கள் சொல்வது உண்மைதானோ என்று என்ன தோன்றுகிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுபோல இப்போது வனிதாவின் மகளான ஜோவிகா போட்டிருந்த டி-ஷர்டில் ஒரு வசனம் பதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் சிங்கம் சிங்கிளாக தான் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது இப்போதைய சூழ்நிலையில் மாயா கேங் உடன் சேர்ந்து ஜோவிகா விளையாட கூடாது என்பதை மறைமுகமாக வனிதா இப்படி சொல்லி அனுப்பி இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனாலும், அதையும் புரிந்துகொள்ளாமல் ஜோவிகா, மாயா மற்றும் அவரது டீமில் தான் இன்னுமும் இருந்து வருகிறார். பூர்ணிமா எனக்கு மஞ்சள் டீ சர்ட் வந்திருக்கிறது என்று வருத்தப்பட்ட வீடியோ வெளியானதிலிருந்து அப்போ பி ஆர் டீம் இவர்களுக்கு கோட் வேர்ட் டீஷர்டில் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.