பிக் பாஸ் விக்ரமனின் புதிய உருட்டு… தரமான பதிலடி கொடுத்த அசீம்..அடேங்கப்பா உலக மகா உருட்டு..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர், இந்த மூன்று போட்டியாளர்களில் அஷீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்கின்ற கடும் போட்டி நிலவி வந்த நிலையில் , அசீம் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார், இரண்டாவது இடத்தில் விக்ரமன் பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாக்கெடுப்பு மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், அந்த வகையில் மக்கள் அதிக வாக்குகள் அளித்து அசீம் வெற்றி அடைய செய்துள்ளார்கள், விக்ரமன் வெற்றி பெறுவார் என என எதிர்பார்க்க பட்ட நிலையில், விக்ரமன் அரசியல் சார்ந்த கருத்துக்களை மக்கள் ஏற்று கொள்ள வில்லை என்றும், அதே நேரத்தில் அசீம் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கேம் ஷோ அந்த விதத்தில், எதோ ஒரு வகையில் மக்கள் மனதில் அசீம் இடம் பிடித்து இருந்ததால் தான் மக்கள் அசீமை வாக்களித்து வெற்றி அடைய செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ள விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது, இதற்கு முன்பு நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் போட்டி முடிந்து வெளியே வந்த பின்பு அவர்களுக்குள் வாக்குவாதம் செய்வதில்லை, ஆனால் இந்த முறை விக்ரமன் – அசீம் இடையில் நாளுக்கு மோதல் அதிகரிக்க தொடக்க புள்ளியாக இருந்துள்ளது விக்ரமன் தான்.

பேட்டி ஒன்றில், விக்ரமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடைந்த தோல்வி பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு விக்ரமனின் பதில் உலக மகா உருட்டாக அமைத்துள்ளது, அதில் ஓட்டிங் மிஷினவே நாங்கள் நம்பவில்லை, வயலுக்கு வேலைக்கு செல்லும் தாய்மார்களிடம் சென்று நீங்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஹாட்ஸ்டாரில் ஓட்டு போடுங்க என்று சொல்வது என்பது அந்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையே நீங்கள் கொடுக்கவில்லை அவர்களும் பங்கெடுக்கக்கூடிய வகைகளில் இந்த வாக்கு முறை என்பது இருந்திருக்க வேண்டும், என்று விக்ரமன் தெரிவித்துள்ளது.

வயலுக்கு வேலைக்கு செல்லும் தாய்மார்கள் ஹாட்ஸ்டாரில் ஓட்டு போட்டிருந்தால் விக்ரமன் வெற்றி பெற்று இருப்பார் என்பது போன்று அமைத்துள்ளது, முதலில் வயலில் வேலை செய்யும் தாய்மார்கள் யாருக்காவது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தெரியுமா.? அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி வயலில் வேலை செய்யும் தாய்மார்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுவதற்கு நாட்டில் அதி முக்கியத்துவம் வாய்த்த நிகழ்ச்சியா இது என சமூக வலைதளத்தில் வலைதள வாசிகள் விக்ரமன் உருட்டுக்கு கிண்டல் செய்து வருகிறார்கள்.

அதே வேலையில் விக்ரமனுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் அசீம், பேட்டி ஒன்றில் அசீம் பேசுகையில், இந்த வெற்றிக்கும் மக்களின் ஓட்டுக்கும் சம்பந்தமில்லை என்று விக்ரமன் சொல்லி இருப்பது, இந்த நிகழ்ச்சியில் சுமார் ஏழு தடவைக்கு மேல் விக்ரமன் நாமினேட் செய்யப்பட்ட போது மக்கள் வாக்களித்து மீண்டும் பிக் பாஸ் வீட்டில் தொடர்வதற்கான வாய்ப்பைப் பெற்றார், அப்படியானால் அவர் நாமினேஷன் செய்யப்பட்ட பொழுது மக்கள் வாக்களித்து அவர் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்தால் அது மக்களால் கிடைத்த வெற்றி.

ஆனால் இறுதிப் போட்டியில் மக்கள் வாக்களித்து நான் வெற்றி பெற்று விக்ரம் தோல்வி அடைந்தால் அந்த வெற்றிக்கும் மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வது, ஒருவரின் மனநிலை என்பது போட்டியில் வெற்றியி தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சமமான அளவில் இருக்க வேண்டும். அந்த வகையில் விக்ரமனுக்கு தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என பதிலடி கொடுத்துள்ளார் அசீம், இந்நிலையில் விக்ரமன் தெரிவித்தது போன்று வயலில் வேலை செய்யும் தாய்மார்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டு போடும் உரிமை கிடைத்திருந்தால் விக்ரம் வெற்றி அடைத்திருப்பாரா என உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்கள்.