96 நாட்கள் இருந்த விசித்ராவின் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா சினிமாவில் நடிச்சா கூட இவ்வளவு பணமா கிடைக்காது

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 97 நாட்களை கடந்துள்ளது. முந்தைய ஆறு சீசன்களில் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் இரண்டு வீடுகள், டபுள் எவிக்‌ஷன், மிட்வீக் எவிக்‌ஷன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, அடுத்தடுத்த எலிமினேஷன்ஸ் என முற்றிலும் மாறுப்பட்டதாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் துவக்க போட்டியாளராக இணைந்த நடிகை விசித்ரா, சக போட்டியாளர்களுக்க சிறப்பான வகையில் டஃப் கொடுத்து நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தார். கடந்த வாரத்தில் அவர் எலிமினேட் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்தார். முன்னதாக பணப்பெட்டியை இவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பூர்ணிமா பணப்பெட்டியுடன் வெளியேறினார்.

விசித்ராவின் எலிமினேஷன் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்தெல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார் விசித்ரா. இந்த பார்ட்டியின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்ட்டியில் பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டதை இந்த வீடியோ மூலம் தெரிந்துக் கொள்ள முடிந்தது. இந்த வீடியோவில், ஒழுங்காக பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு விசித்ரா சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் எந்த மூத்த போட்டியாளரும் இல்லாத வகையில் மிக நீண்ட நாள் தாக்குப்பிடித்த போட்டியாளர் விசித்ரா. தொடர்ந்து பல முகங்களையும், பரிணாமங்களையும் காட்டியவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் அம்மா கேட்டகிரியில் ஒரு போட்டியாளர் உள்ளே அனுப்பப்படுவார். இவர்கள் பெரும்பாலும் ஓரிரெண்டு வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பர். இரண்டாவது சீசனில் வந்த நடிகை மும்தாஜ் மட்டுமே நான்கு அல்லது ஐந்து வாரங்கள் இருந்தார் என்று தோன்றுகிறது. இதே பிரிவில் வந்த மற்ற போட்டியாளர்கள் யாரும் பாதி நிகழ்ச்சி வரை கூட இருந்ததில்லை. ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் நிகழ்ச்சியின் கடைசி வரை வந்தார் விசித்ரா.

கடந்த சில வாரங்களாக விசித்ராவிடம் மாற்றங்களும், தடுமாற்றங்களும் பெரியளவில் தென்பட்டன. குறிப்பாக அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே வந்து சென்றபிறகு நடந்த சில சம்பவங்கள் விசித்ராவின் மீதான ஆடியன்ஸின் பார்வை மாறத் தொடங்கியது. மிகக் குறிப்பாக, தினேஷ் குறித்து விசித்ரா முன்னெடுத்த தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறத் தொடங்கின.

தினேஷ் மீது போட்டி ரீதியாக முன்வைக்க ஏராளமான விமர்சனங்கள் இருந்தும், அதை விடுத்து அவரது பர்சனல் வாழ்க்கை குறித்து விசித்ரா பேசியது பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அர்ச்சனாவுடன் நட்பில் இருந்தபோது அவர் செய்த விஷயங்களை ஊக்குவித்தவர், தற்போது அதே விஷயங்களுக்காக அவரை உளவியல் ரீதியாக தாக்கியதும் சமீப நாட்களில் நடந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக பிரதீப்பின் ரெட்கார்டு, அர்ச்சனா உடனான பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக விளங்கிய மாயா மற்றும் பூர்ணிமா உடன் அவர் கடைசி சில வாரங்கள் கூட்டணி சேர்ந்தது பார்வையாளர்களால் ரசிக்கப்படவில்லை. இதுதான் விசித்ராவின் சறுக்கல் தொடங்கிய இடமும் கூட என்று பேசப்பட்டது. இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விசித்ரா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் 95 நாட்கள் இருந்த விசித்ரா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. நாள் ஒன்றிற்கு விசித்ரா 40 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் வந்துள்ளது. அதன்படி பார்த்தால் 95 நாட்களில் அவரின் சம்பளம் கிட்டத்தட்ட ரூ.35 லட்சத்திற்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்களில் ஒருவராக விசித்ரா இருப்பார் என்று கூறப்படுகிறது.