மாயா டைட்டில் வின்னர்… அதுக்காக கமல் செய்யும் தில்லாலங்கடி… போட்டுடைத்த பிரபல நடிகை…

0
Follow on Google News

விஜய் டி.வி.யில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 92 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. சினிமாவை விட அவர் இந்த ஷோவில் தான் அதிகம் சம்பாதித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். தற்போது ஒளிபரப்பாகி வரும் 7வது சீசனில் நடிகர் கமல் ஹாசன் ஒருதலைப்பட்சமாக இருக்கிறார் என விமர்சனம் எழுந்து வருகிறது. அதன்படி பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது, மாயா கேங்குக்கு ஆதரவாக பேசுவது என கமல் இருந்துவருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அந்த வகையில் தற்போது கமல் பிக் பாஸில் இருந்து விலக முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிகழ்ச்சியால், தனது அரசியல் வாழ்வு பாதிக்கப்படுமோ என்ற எண்ணம் கமலுக்கு எழுந்துள்ளதாகவும் இந்த சீசனோடு அவர் பிக் பாஸை முடித்துக் கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் கமல்ஹாசன் பிக் பாஸ் மூலம் கிடைக்கும் பெரும் சம்பளத்தை விட்டு செல்லமாட்டார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த பிக் பாஸ் சீசனில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அடிக்கடி டபுள் எலிமினேசன்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வாரமும் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேறி உள்ளனர். வினுஷா விவகாரத்திலேயே நிக்சன் வெளியேற்றப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் அதன் பின்னர் ஐசுவை வெளியேற்றி விட்டு மிக்ஜாம் புயலை காரணமாக வைத்து நிக்சனை மீண்டும் பிக் பாஸ் காப்பாற்றிய நிலையில், இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார் நிக்சன்.

இந்தநிலையில், வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து ஸ்கோர் செய்த அர்ச்சனாவை தற்போது ஆஃப் செய்ய கமல்ஹாசனே களமிறங்கி விட்டாரா என்கிற கேள்விகளை நடிகை சனம் ஷெட்டி எழுப்பியுள்ளார். முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகருமான சனம் ஷெட்டி கூறுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் போடும் குறும்படங்கள் தான் ஹைலைட்டாக இருந்து வருகிறது.

இந்த சீசனில் கமல் தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள பிரதீப் ஆண்டனி விஷயத்தில் 5 குறும்படங்கள் போட்டார். விசித்ரா மற்றும் அர்ச்சனா இடையேயான பஞ்சாயத்தில் ஒரு குறும்படம் கூட போடாமல் புரிஞ்சிடுச்சா என்று கடந்து போகிறார் என்று கூறி சனம் ஷெட்டி விமர்சித்து உள்ளார். மேலும் சந்தேகம் கிளியர் ஆச்சா அர்ச்சனானு திரும்ப திரும்ப கேட்பாங்க, ஆனா அந்த சந்தேகம் கிளியர் பண்ண ஒரு குறும்படம் போட மாட்டாங்க! பெயரை கிளியர் பண்ண மட்டும் 5 குறும்படம் போடுவாங்க! என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சனம் செட்டி ஒருமுறை நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மாயாவுடன் ஏதாவது ஒரு பிரச்சனையை செய்தால், கமலின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என்று சொல்லி இருக்கிறார். மேலும் ஒவ்வொரு வாரமும் மாயாவுக்கு யாரெல்லாம் எதிரியாக இருக்கிறார்களோ அவர்களை கமல் வச்சு செய்கிறார். இது மாயாவை விளையாட்டில் ஆர்வமாக இருக்க இன்னும் தூண்டுகிறது.

தவறான வார்த்தைகள் மாயாவால் பேசப்பட்டால் அது என்டர்டெயின்மென்ட் கேட்டகிரியில் சேர்க்கப்படுகிறது. தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அவர்களை மூளை சலவை செய்து தன்னுடைய ஆட்டத்திற்கு ஆதாயமாக பயன்படுத்துகிறார் மாயா. அதை விளையாட்டின் முக்கியமான ஸ்டேட்டர்ஜி என சொல்லி முடித்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு வாரமும் வீட்டிற்குள் யார் இருக்க வேண்டும் யார் வெளியே போக வேண்டும் என்பதை மாயா தான் மறைமுகமாக முடிவு செய்கிறார். இதுவரை அது தவறு என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்ட படவே இல்லை. மாயாவுக்கு பாராட்டும், தேவைப்படும் இடங்களில் மன்னிப்பும் உடனடியாக கமலஹாசனால் வழங்கப்படுகிறது. மாயாவுடன் ஒத்துப் போனால் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை நார் நாராக கிழித்து சனம் செட்டி துங்கவிட்டுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.