வாக்களிக்கும் மக்களை முட்டாளாக்கும் பிக் பாஸ்…. இவர் தான் டைட்டில் வின்னர் என முடிவு செய்துவிட்டது மக்களே..

0
Follow on Google News

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்படியோ ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இனி பிக்பாஸ் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தவே வேண்டாம் என்று மக்கள் கூறும் வகையில் தான் இப்போதைய பிக்பாஸ் 7 போய் கொண்டுள்ளது. பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இப்படியொரு சீசனை பார்த்தது கிடையாது என அனைவரும் செல்லும் வண்ணமே இந்த சீசன் உள்ளது. பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது, மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் செயல்களை கேள்வி கேட்காதது என்று பல சம்பவங்களால் மக்களை மன உளைச்சலுக்கு கொண்டு சென்றுள்ளனர் இந்த சீசனின் போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவி.

இந்நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்ற ஆர்வம் சில தீவிர ரசிகர்களின் மனதில் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது ஓட்டு நிலவரத்தின் படி முன்னிலையில் உள்ள அர்ச்சனா தான் பிக்பாஸ் 7 டைட்டிலை வெல்வார் என்பது உறுதியாக தெரிகிறது.

ஆனால் மக்களின் ஓட்டுக்கள் மற்றும் கருத்துக்களை விஜய் டிவி மதிக்காது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படி மதித்திருந்தால் மாயா மற்றும் பூர்ணிமா எப்போதோ வீட்டை விட்டு வெளியே சென்றிருப்பார்கள். அவர்களை இன்றுவரை விஜய் டிவி வீட்டிற்குள் தான் வைத்துக் கொண்டுள்ளனர்.

விதிமீறல் செய்வது, நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் மற்றும் குழந்தைகளை முகம் சுளிக்கும் வகையில் பேசுவது, தங்களின் சுயநலத்திற்காக பிறறை குற்றம் சாட்டுவது என்று இவர்கள் இருவரும் செய்த அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சம் கிடையாது. ஆனால் கமல்ஹாசனின் துணை கொண்டும், கன்டென்டுக்காகவும் இவர்களை விஜய் டிவி காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

அதன்படி தற்போது டைட்டிலை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதிலும் மக்களின் ஓட்டுக்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கார்ப்பரேட் புத்தியை காட்டி இருக்கிறது விஜய் டிவி. யாருக்கு டைட்டிலை கொடுக்க வேண்டும் என்று சேனல் தரப்பு தற்போது முடிவு செய்துவிட்டதாம்.

மக்களின் அதீதமான ஆதரவை பெற்று முன்னிலையில் இருக்கும் அர்ச்சனாவுக்கு தரக்கூடாது என்பதே விஜய் டிவியின் மாஸ்டர் பிளானாம். அனைவரை விடவும் 40 சதவீதம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் அர்ச்சனாவை டீலில் விட முடிவு செய்துள்ளது விஜய் டிவி.

மேலும், டைட்டிலை அர்ச்சனாவுக்கு பதிலாக மணி அல்லது மாயாவுக்கு கொடுக்கலாம் என விஜய் டிவி பேசி வருகின்றனராம். இவ்வாறு விஜய் டிவி எடுத்துள்ள முடிவு குறித்த தகவல் இணையத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது‌.

இப்படி பட்ட நிகழ்வு மட்டும் நடக்கவே கூடாது என மக்கள் அனைவரும் விஜய் டிவியை எதிர்த்து பல கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் விஜய் டிவியின் இந்த முடிவானது மாறவும் வாய்ப்புள்ளது. காத்திருந்து பார்ப்போம் வெல்வது மக்களின் ஓட்டுக்களா அல்லது கார்ப்பரேட் காரர்களின் சூழ்ச்சியா என்று.