இதெல்லாம் ரெம்ப சீப்பான விஷயம்.. ஜெய் உடனான லிவிங் ரிலேஷன்ஷிப் … வாணி போஜன் நச் பதில்..

0
Follow on Google News

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். ஹீரோவான முதல் படத்தில் நடிகர் ஜெய் க்கு அமோக வரவேற்பு கிடைத்தாலும், அடுத்தடுத்து கதை தேர்வு மற்றும் இயக்குனர் தேர்வுகளில் கோட்டை விட்ட ஜெய், பெரிதாக ஜொலிக்கவில்லை. இந்நிலையில் நடிகை அஞ்சலி உடன் காதல் கிசு கிசுவில் சிக்கிய ஜெய், இருவரும் ஒன்றாக சுற்றி வ்ருவதாக செய்திகள் வெளியானது.

நடிகை அஞ்சலி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெய் – அஞ்சலி காதல் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதன் பின்பு நடிகை வாணி போஜன் உடன் கிசு கிசுவில் சிக்கினார். வெப் சீரியஸ் ஒன்றில் வணிபோஜன் உடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த ஜெய் அவருடன் காட்டிய நெருக்கம் பின்பு காதலாக மாறியதாகவும், மேலும் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கிசு கிசு வெளியானது.

ஒரு கட்டத்தில் வாணி போஜனிடம் கதை சொல்லும் வரும் இயக்குனர்களிடம் முதலில் ஜெய்தான் கதை கேட்பது. கதை ஜெய்க்கு பிடிக்கவில்லை என்றால் நிராகரித்து விடுவார் ஜெய் என வணிபோஜனுக்கு எல்லாம் ஜெய் தான் என்கிற இடத்துக்கு வந்துவிட்டர், இதானால் வாணிபோஜன் படவாய்ப்புகள் பறிபோகும் சூழல் ஏற்பட ஜெய் – வாணி போஜன் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ஜெய் உடன் காதல் குறித்து வாணி போஜன் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இந்த மாதிரி செய்திகள் வந்த போது நான் ஜெய்யிடமே என்னது இதெல்லாம் என்று கேட்டேன், அதற்கு ஜெய் உடன் ரிலேஷன்ஷிப் என்று எழுதி இருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன், ஆனால் லிவிங் ரிலேஷன்ஷிப் என்று எழுதுவதை ரொம்ப சீப் ஆக இருந்தது என தெரிவித்தார் ஜெய்.

கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்ல இருக்கேன். இதுல வந்து யாரோ ஒருத்தரோட வீட்ல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்றது ரொம்ப சீப் ஆன விஷயம் என ஜெய் கூறியதாக வாணி போஜன் தெரிவித்துள்ளார்.