சூர்யா மனம் குளிர அமீரை அசிங்கப்படுத்திய திரிஷா… எப்படியெல்லாம் ஒரு பொழப்பு தேவையா திரிஷா உங்களுக்கு.?

0
Follow on Google News

திரையுலகில் பொதுவாக ஒரு நடிகை 5 வருடங்கள் பீக்கில் இருப்பதே பெரிய காரியம். ஆனால் திரிஷாவோ 22 வருடங்களாக ஹீரோயினாக பீக்கில் இருக்கிறார். மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடைசியாக லியோ படம்வரை நடித்திருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பையும், அழகையும் கூட்டிக்கொண்டே செல்வதுதான்.

திரிஷா அறிமுகமான மௌனம் பேசியதே படம் வெற்றி பெற்றது.அ தனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உச்சத்தில் இருந்தார். ஒருபக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் மறுபக்கம் அபியும் நானும் என்ற மிகச்சிறந்த படத்தில் நடித்து தன்னுடைய திறமையை காண்பித்தார்.

இப்படி உச்சத்தில் இருந்த திரிஷாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ஆனாலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் 96 படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் அவர் ஏற்றிருந்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் எப்படி ரசிகர்களை கட்டிப்போட்டதோ அதேபோல் 96 ஜானு கதாபாத்திரமும் அனைவரையும் கவர்ந்தது.

96 வெற்றிக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்த அவர் இப்போது அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. அதேபோல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையிலும் அவர் நடித்துவருகிறார். இவை தவிர மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

2002ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் திரிஷா. அமீர் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இயக்குநர் அமீர், திரிஷா இருவருக்குமே மெளனம் பேசியதே தான் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஹிட் மூலம் தான் இருவருமே திரையில் கால் பதித்தது குறிப்பிடத்தக்கது. அதுவும் முன்னதாக சில விளம்பரங்களில் நடித்துள்ள திரிஷா, ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரேயொரு காட்சியில் நடித்திருந்தார்.

இந்நிலையில், மெளனம் பேசியதே வெளியாகி 21 ஆண்டுகள் ஆனதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திரிஷா. “இந்த நாளை இனிய நாளாக்கிய ரசிகர்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். உங்கள் ஆதரவையும் அன்பையும் தொடர்ந்து வேண்டுகிறேன்” என உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். திரிஷா நன்றி தெரிவித்துள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர் அமீர்க்கு மட்டும் நன்றி கூறவில்லை.

முன்னதாக இயக்குநர் அமீரும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும் அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்து விடாமலும், துவண்டு விழாமலும் பார்த்துக்கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்கு அளித்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என தெரிவித்திருந்தார்.

மெளனம் பேசியதே படத்தில் நடித்த, பணியாற்றிய சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி, யுவன் போன்ற அனைத்து தொழிநுட்ப கலைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரை சூர்யா மட்டும் நன்றி சொல்லாமல் அமைதி காத்து வருகிறார். சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது மெளனம் பேசியதே. அதேநேரம் பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா அமைதியாக இருப்பதும் சர்ச்சையாகியிருந்தது

குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யா கோபித்துக் கொள்வார் என்று தான் திரிஷா நன்றி கூறவில்லை என்று சிலர் கூறுகின்றனர். அதேநேரம் திரிஷா இவ்வளவு தூரம் வர காரணமே அமீர் தான், அவர்க்கு நன்றி சொல்ல தயக்கமா என்று திட்டி வருகின்றனர்.