ஒரே நேரத்தில் அஜித் – விஜய் இருவர் மீதும் சவாரி செய்யும் திரிஷா.. அந்த விஷயத்தில் மட்டும் என்ன ஒரு ஒற்றுமை..!

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் டாப் டாப் ஒன் நடிகையா இருந்தவர் குஷ்பூ, பின்பு அவரை தொடர்ந்து சிம்ரன் அதன் பின்பு நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் நடிகை திரிஷா. தங்களுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர், இவர்கள் திருமணத்திற்கு பின்பு தான் அவர்களுடைய நம்பர் ஒன் இடத்தை மற்ற நடிகைகள் கைப்பற்ற முடிந்தது.

ஆனால் நடிகை திரிஷா தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவரை அடித்து துவம்சம் செய்து விட்டு சுமார் ஆறு வருடங்களாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ராஜாராணி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த நயன்தாரா அசுர வளர்ச்சிக்கு பின்பு நடிகை திரிஷா சினிமாவில் காணாமல் போய்விட்டார் என்றே சொல்லும் அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் திரிஷா.

மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க பலமுறை திரிஷா முயற்சித்தும் நயன்தாரா இருக்கும் வரை அது அவருக்கு கனவாகவே அமைந்தது. இந்நிலையில் நயன்தாரா திருமணம் செய்த பின்பு, புதியதாக எந்த ஒரு படத்தில் கமிட் ஆகாமல், குடும்பத்துடன் செட்டிலாக முடிவெடுத்ததை தொடர்ந்து நயன்தாரா இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நடிகையின் மத்தியில் நடந்து வருகிறது.

அந்த வகையில் நீண்ட வருடம் வனவாசத்துக்கு பின்பு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள திரிஷா, அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடிப்பதின் மூலம் அடுத்த நயன்தாராவின் இடத்தை தான் பிடித்து விடலாம் என்கின்ற ஃபார்முலாவில், நேரடியா நடிகர் விஜயை தொடர்பு கொண்டு அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் நடிக்கும் புதிய படத்தில், விஜய் சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் திரிஷா. இதேபோன்று ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடனும் ஜோடி சேர்வதின் மூலம், மேலும் தனக்கான சினிமா ரி என்ட்ரி இன்னும் மாஸாக இருக்கும் என்ற திட்டமிடலுடன் நடிகர் அஜித்தையும் தொடர்பு கொண்டு தனக்கு அவருடைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை கேட்டுள்ளார் நடிகை திரிஷா.

அஜித்துடன் தொடர்ந்து திரிஷா நடித்த ஜி, கிரீடம் போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தாலும், மங்காத்தா படம் வெற்றி அடைந்தது. அதன் பின்பு இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் தவித்த நடிகை திரிஷாவுக்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுக்கும் வகையில் என்னை அறிந்தால் படத்தில் தன்னுடைய சிபாரிசில் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார் நடிகர் அஜித்.

ஆனால் இந்த படம் வெற்றி பெற்றாலும் கூட திரிஷாவுக்கு அடுத்தடுத்து எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படத்தில் திரிஷாவுக்கு தன்னுடைய சிபாரிசில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார் அஜித். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் மற்றும் விஜய் இருவர் மீதும் ஒரே நேரத்தில் திரிஷா சவாரி செய்ய இருப்பது அவருக்கு மிக பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் தொழில் ரீதியாக அஜித் – விஜய் இருவருக்கும் கடும் போட்டி இருந்தாலும், திரிஷாவுக்கு உதவி செய்வதில் மட்டும் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை பார்த்து ஆச்சரியத்துடன் பார்க்கிறது சினிமா வட்டாரங்கள். அதே நேரத்தில் நயன்தாரா விட்டுச்சென்ற இடத்தை திரிஷா தக்க வைப்பாரா என்பது அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளியான பின்பு தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.