மதுபோதையில் தள்ளாடி விழுந்த ஸ்ரீதிவ்யா… மட்டையான ஸ்ரீதிவ்யாவை உடன் குடித்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை ஸ்ரீதிவ்யா குழந்தை நட்சதிரமாக தெலுங்கு சினிமாவில் சில படங்கள் நடித்தவர்,17 வயதில் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் மூன்று படங்கள் வரை நடித்தவர் அங்கே மார்க்கெட் இல்லாததால் தமிழ் சினிமா பக்கம் வந்தார்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து தமிழில் ஒரு ரவுண்டு வருவார் ஸ்ரீதிவ்யா என எதிர்பார்க்கப்பட்டார்.

மேலும் ஸ்ரீதிவ்யா குடும்ப பாங்கான பெண்ணாக இருக்கிறார், அவர் குடும்ப பாங்கான கதையில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்தது. தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட தமிழ் படங்களில் ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மருது ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது.

இரண்டுமே கிராமத்து கதை அம்சம் கொண்ட படம் என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஸ்ரீதிவ்யா அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார். ஆனால் அவருடைய கவர்ச்சி படங்களை பார்க்கும் ரசிகர்கள் இதெல்லாம் தேவையில்லாதது, எங்களுக்கு குடும்ப பாங்கான ஸ்ரீதிவ்யாவை தான் பிடிக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்ற்றனர்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் இமான் அண்ணாச்சி, இவர் தள்ளுவண்டியில் காய் கறி கடை வைத்து வியாபாரம் செய்து தன்னுடைய கடின உழைப்பினால் தொலைக்காட்சி தொகுப்பாளராக உயர்ந்துள்ளார். மேலும் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வருகிறார் இமான் அண்ணாச்சி. சமீபத்தில் தன்னுடைய புதிய பங்களாவுக்கு புதுமனை புகு விழா நிகழ்ச்சி நடத்தினார், இதில் திரைப்பட நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் மது விருந்தும் நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட நடிகர் மற்றும் நடிகைகள் பலர் மது அருந்தியுள்ளனர், நடிகை ஸ்ரீதிவ்யா மது அருந்தி போதையில் எல்லை மீறி நடந்துள்ளார். மேலும் மது பாட்டிலுடன் போதையில் தள்ளாடி கொண்டே நடனம் ஆடியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற மது விருந்தில் ஒரு கட்டத்தில் எழுந்து நடக்கும் போது தள்ளாடிய நடிகை ஸ்ரீதிவ்யா அங்கே கீழே விழுந்து மட்டையாகியதாக கூறப்படுகிறது.

உடனே அங்கிருந்தவர்கள் ஸ்ரீதிவ்யா முகத்தில் தண்ணீரை தொழித்து எழுப்பியுள்ளனர். மேலும் பெரும்பாலும் சுற்றி இருந்த சினிமா துறையினர் போதையில் இருந்துள்ளனர். அனாலும் மது அருந்தாத சிலர், ஸ்ரீதிவ்யாவை சிறிது நேரம் அமரவைத்து, எலுமிச்சை ஜூஸ் கொடுத்துள்ளனர், இருந்தும் ஸ்ரீதிவ்யாவுக்கு போதை இறங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்களே பத்திரமாக ஸ்ரீதிவ்யாவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மது, கஞ்சா புகை பழக்கம்… அதிக பாய் ஃபிரண்ட் …. சித்ரா பற்றிய திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சினிமா பிரபலம்..!