சமந்தா உடல்நிலை மோசம்.. செம்ம மகிழ்ச்சியில் திரிஷா… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷா, கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலே முடங்கி இருந்தார், இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் த்ரிஷா. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பமே நல்ல வரவேற்பு திரிஷாவுக்கு கிடைத்துள்ளது.

நடிகை நயன்தாரா திருமணம் முடிந்து சென்ற பின்பு அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்ட திரிஷா, முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தால் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம் இன்னும் அபாரமாக இருக்கும் என்று திட்டமிட்டு ஒரே நேரத்தில், அஜித் மற்றும் விஜய் இருவர் படத்திலும் கமிட் ஆகியுள்ளார், விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது.

சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்பு தன்னுடைய சம்பளத்தை 3 கோடியாக ஏற்றியவர் தற்பொழுது 5 கோடியாக ஏற்றியுள்ளார். இந்நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்து சென்ற பின்பு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் சமந்தாவை நோக்கி சென்றது,இதனால் திரிஷா மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தார்.

இந்நிலையில் தற்போது சமந்தா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிய பட வாய்ப்புகளில் கமிட்டாகாமல் தவிர்த்து வருகிறார். இதனால் சமந்தா நடிக்க வேண்டிய படங்கள் திரிஷாவை நோக்கி நகர தொடங்கியுள்ளது. இதனால் த்ரிஷாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.