சிவகார்த்திகேயனுக்கு இரவில் டார்ச்சர் கொடுத்த ஓவியா.! விவாகரத்து செய்வதாக மனைவி மிரட்டல்..என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகை ஓவியா களவாணி படத்தில் நடிகர் விமல் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகனார், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்கும் முன், சுமார் பத்துக்கு மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மக்கள் மத்தியில் நடிகை ஓவியாவை பிரபலம் அடைய செய்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு நடிகை ஓவியாவுக்கு தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இதன் பின்பு கடை திறப்பு விழா, பொது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் என பிஸியான ஓவியா செல்லும் இடமெல்லாம் ரசிகர் கூட்டம் அலைமோதியது, ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஓவியாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தாலும் அதை தக்க வைத்து கொள்ளாமல் கோட்டை விட்டார் ஓவியா. சரியான கதையை தேர்தெடுக்கமால், அவர் நடித்த கதாபாத்திரங்கள் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் செய்துவிட்டது.

இந்நிலையில் தனது முதல் படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் விமல் உடன் நெருக்கி பழகி வந்துள்ளார் ஓவியா, இந்த விவகாரம் விமல் மனைவிக்கு தெரியவந்ததை தொடர்ந்து விமல் குடும்பத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இனி ஓவியா உடன் நெருங்கி பழகுவதாக எனக்கு தகவல் வந்தால், உன்னை விவாகரத்து செய்து விடுவேன் என மனைவி மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, ஓவியாவின் உறவை முறித்து கொண்டார் விமல்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் ஓவியா, சென்னை மற்றும் மஹாபலிபுரத்தில் உள்ள இரவு நேர பப்களில் மது அருந்தி காலத்தை கடத்தி கொண்டே சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார், அந்த வகையில் தன்னுடன் மெரினா படத்தில் ஜோடியாக நடித்த சிவகார்த்திகேயன் தற்போது சினிமாவில் முன்னனி நடிகராக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வளம் வருவதால்.

அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட வாய்ப்பு கேட்டு நச்சரித்து வந்துள்ளார். மேலும் அதிகமாக இரவு நேரங்களில் சிவகார்த்திகேயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சினிமா வாய்ப்பு கேட்டு கடும் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். ஓவியாவின் டார்ச்சரை பொருத்து கொள்ள முடியாமல் சமீப காலமாக ஓவியா தொலைபேசி அழைப்பை சிவகார்த்திகேயன் எடுப்பதே கிடையாது என கூறப்படுகிறது.