கிழவிக்கு இதெல்லாம் ஓவர்… அசிங்கப்பட்ட நயன்தாரா.. காரணம் நடிகர் அஜித்..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இதன் பின்பு வல்லவன் படத்தில் நடிக்கும் போது நடிகர் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா மிக குறுகிய காலத்தில் சிம்பு உடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார். இதன் பின்பு வில்லு படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் பிரபுதேவா ஏற்கனவே திருமணம் முடிந்தவர் என்றும் தெரிந்து அவரை காதலித்தார் நயன்தாரா.

பிரபு தேவா – நயன்தாரா காதல் திருமணம் வரை சென்று நின்றது. இதன் பின்பு ராஜா ராணி படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பில்டப் கொடுக்க நயன்தாரா முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்களும் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அவருடைய மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது.

இதனை தொடர்ந்து சுமார் ஏழு வருடங்களாக நயன்தாரா காதலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சினிமாவில் பெரிய வரவேற்பு இல்லை. இதனால் தன்னனுடைய உதவியாளர், மேனேஜர், பாடி கார்ட் என காதலன் விக்னேஷ் சிவன் சும்மா தானே இருக்கிறார் என எங்கே சென்றாலும் கூடவே அழைத்து செல்கிறார் நயன்தாரா. இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் இயக்குனராக நயன்தாரா சிபாரிசில் வாய்ப்புகளை பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க பத்து கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. இது சினிமா வட்டாரதத்தில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தும் அஜித் கால்சீட் கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை தொடர்ந்து லைக்கா நிறுவனம் நயன்தாராவுக்கு 10 கோடிக்கு சம்பளம் கொடுக்க ஒப்பு கொண்டதற்கு காரணமாக அமைத்தது அஜித் தான்.

இதனை தொடர்ந்து தற்பொழுது ஒப்பந்தமாகி உள்ள படம் முடிந்து அடுத்த படங்களுக்கு கால் சீட் கேட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் 15 கோடி சம்பளம் வேண்டும் என்றும் தன்னுடன் கூட வரும் விக்னேஷ் சிவன் செலவுகளையும் ஏற்று கொள்ள வேண்டும் என பல கண்டிஷன் போடுகிறார் நயன்தாரா. இதை கேட்கும் ஒரு சில தயாரிப்பாளர் நயன்தாரா முகத்தில் அடித்தது போன்று மேடம் வேறு ஒரு நடிகையை வைத்து நாங்கள் படம் எடுத்து கொள்கிறோம் என தெரிவித்துவிட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா ஆணவத்தை அடக்க இனி யாரும் அதிக சம்பளம் கொடுத்து படத்தில் ஒப்பந்தம் செய்ய வேண்டாம், பட வாய்ப்புகள் இல்லை என்றால் தானாக சம்பளத்தை குறைத்து கொள்வார் நயன்தாரா என படத்தின் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 40 வயசு கிழவிக்கு இதெல்லாம் ஓவர் என நயன்தாராவின் நடவடிக்கைகள் குறித்து சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

வீட்டு பக்கம் வரவே கூடாது.. அனிருத்தை விரட்டியடித்த ரஜினிகாந்த்…ஐஸ்வர்யா இப்படி செய்யலாமா.?