தலைகீழாக மாறிய நயன்தாரா சினிமா வாழ்க்கை… பாவம் எவ்வளவு துயரத்தை தான் தாங்கும் அந்த மனசு..

0
Follow on Google News

நயன்தாரா திருமணத்திற்கு முன்பு ஜாக்பாட் அடிப்பது போல் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கு சம்பளம் பல மடங்கு அதிகரித்து கொண்டே சென்றது. மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து வந்த நயன்தாராவுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்பு அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

தன்னுடைய திருமண நிகழ்வை ஓடிபி தளத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து முடிந்த நிலையில், திருமணம் முடிந்த பின்பு அந்த நிறுவனம் நயன்தாரா சொன்ன விலைக்கு அவர்களுடைய திருமண நிகழ்வை வாங்க மறுத்துவிட்டது, மேலும் மிகக் குறைந்த விலைக்கு கேட்க இதனால் நயன்தாராவுக்கு அந்த நிறுவனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதுவரை நயன்தாராவின் திருமணம் நிகழ்வு ஒளிபரப்பாகவில்லை.

இதனால் நயன்தாராவுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை இழப்பு என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்பு அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு மிகப்பெரிய அவமானத்தை பெற்று தரும் விதத்தில் அமைந்தது, நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் தற்பொழுது அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேற ஒரு இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சொந்தமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பிக் பாஸ் புகழ் நடிகர் கவின் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இந்த படத்தை அஜய் ஞானமுத்து மற்றும் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனர் ஒருவர் இணைந்து இயக்குவதாக இருந்தது, இந்தப் படத்திற்கு ஊர் குருவி என்ற பெயரிட்டு அறிவிப்பும் வெளியானது.

இந்த நிலையில் நயன்தாரா ரவுடி பிச்சர்ஸ்ல் உருவாக இருந்த இந்த படம் வேறு ஒரு தயாரிப்பாளருக்கு கைமாறி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் கவினுக்கு பதில் நடிகர் அஸ்வின் நடிப்பதாக கமிட் ஆகியுள்ளனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவனின் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இயக்கம் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிப்பதாக இருந்த நிலையில், வேறு ஒரு தயாரிப்பு நிறுவன த்திற்கு இந்த படத்தை கைமாறுவதற்கு அந்த உதவி இயக்குனரை முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

மேலும் இயக்குனர் சசி இயக்கத்தில் நடிகர் சித்தார்த், மாதவன், நயன்தாரா ஆகியோர் புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது, ஆனால் அந்த படத்தில் இருந்து நயன்தாரா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதில் ராசி கண்ணா தற்போது கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நயன்தாரா நடிக்கும் படத்திலிருந்து வெளியேற்றப்படுவதும், மேலும் அவருடைய தயாரிப்பில் கமிட்டாகி இருந்த படங்களும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கை மாறி வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு பின்பு அவர்களின் சினிமா வாழ்க்கை தலைகீழாக மாறியது, மேலும் தொடர்ந்து திருமணத்திற்கு பின்பு பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் சினிமாவில் சந்தித்து வரும் நயன்தாரா, எவ்வளவு துன்பங்களையும் தாங்கும் அந்த மனசு தாங்கும் என பலரும் பரிதாபப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.