மும்மொழி கொள்கைக்கு எதிராக முழங்கிய சூர்யா வீட்டின் முன்பு ஹிந்தி எழுத்துக்களா.?

0
Follow on Google News

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜோதிகா, அவருடைய அக்கா நக்மா தயவில் தமிழ் சினிமாவில் அஜித் ஜோடியாக வாலி படத்தில் அறிமுகமானார். மிகக் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வாழ வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். சூர்யா – ஜோதிகா இருவரும் நீண்ட வருடமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கணவன் சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்தை தன்னுடைய பூர்விகமான மும்பையிலே முதலீடு செய்ய வைத்து வந்துள்ளார் ஜோதிகா, இதனால் பெரும் லாபத்தை சம்பாரித்து வந்த சூர்யா, பெரும்பாலும் சென்னையை விட மும்பையில் தான் குடும்பத்துடன் அதிக நாட்கள் கடந்த சில வருடமாக தங்கி வந்தார்.

இந்நிலையில் சென்னையில் படித்து கொண்டிருந்த இரண்டு குழந்தைகளையும் மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்து, குடும்படுத்துடன் மும்பையில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் சூர்யா. இந்த நிலையில் நடிகர் சூர்யா சென்னையில் அரண்மனை போன்று மிகப் பெரிய வீடு ஏற்கனவே உள்ள நிலையில், மும்பையில் குடியேறியுள்ள சூர்யா,

ஏற்கனவே மும்பையில் சூர்யாவுக்கு வீடு இருக்கையில் மேலும் மும்பையில் சுமார் 68 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு புதிய டபுள் எக்ஸ் வீடு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ள சூர்யா நிரந்தரமாக மும்பையில் வசிப்பது என முடிவு செய்துவிட்டார் என கூறப்படுகிறது. சுமார் 9 ஆயிரம் சதுர அடி கொண்ட சூர்யாவின் புதிய வீட்டில், 5 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதியும், அழகான தோட்டத்துடன் மிக பிரமாண்டமாக உள்ளதாம்.

ஏற்கனவே மும்பையில் அவர் வீடு வாங்கி குடியேறிய நிலையில் தற்பொழுது மிக பெருந்தொகைக்கு ஆடம்பரமான புதிய வீடு ஒன்றை சூர்யா வாங்கியுள்ளதால். இனி நிரந்தரமாக சூர்யா மும்பையில் தங்கி விடுவதென முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் சூர்யா ஒரு வீட்டின் முன்பு இருப்பது போன்று புகைப்படத்தில் அந்த வீட்டில் ஹிந்தியில் எழுதப்பட்ட கல்வெட்டு பதிக்கப்பட்டு அந்த புகைப்படம் வைரலானது.

இந்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, மேடைக்கு மேடை தமிழ் தமிழ் என முழங்கி வந்த நடிகர் சூர்யா மும்பை வீட்டில் ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது என பலரும் விமர்சனம் செய்து வந்தனர், மேலும் மும்மொழி கொள்கையை எதிர்க்கும் சூர்யா வீட்டின் முகப்பில் இந்தி எழுத்துக்கள், சூர்யா எதற்காக இரட்டை வேடம் போடுகிறார் என பலரும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து உண்மை என்ன என்பது குறித்து விசாரித்ததில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள மீசு என்கிற உணவகத்திற்கு சென்றுள்ளார் சூர்யா, மும்பையில் உள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் நடிகைகள் இந்த உணவகங்களுக்கு சென்று உணவருந்தி வருவதால், மிக பிரபலமாக மும்பையில் இயங்கி வருகிறது இந்த மீசு உணவகம்.

அந்த வகையில் மும்பையில் தற்பொழுது மனைவி, குழந்தைகளுடன் செட்டிலாகியுள்ள சூர்யா, மீசு உணவகத்திற்கு குடும்பத்துடன் சென்று உணவருந்தி உள்ளார், அப்போது, உணவகத்தை விட்டு வெளியில் வரும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வாலைத்தளத்தில் வைரலாகி உள்ளது, அந்த புகைப்படத்தில் ஹிந்தியில் மீசு என்று அந்த உணவகத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆகையில சூர்யா ஒரு வீட்டின் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம், அது சூர்யா மும்பை வீடு கிடையாது, மும்பையில் பாந்த்ரா நகரில் செயல்பட்டு வரும் ஜப்பானிய உணவகம் என்பது உறுதியான தகவல் வெளியாகியுள்ளதால்,சூர்யா வீட்டின் முன்பு ஹிந்தியில் எழுதப்பட்டுள்ளது என்று சூர்யா மீஸு உணவகத்தின் மும்பு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தவறான தகவலை சிலர் பரப்பி வருவது குறிப்பிடதக்கது.