PS 1 படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா…மணிரத்தினத்திடம் முகத்தில் அடித்தது போல் என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

இயங்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பெரிய பட்ஜெட்டில் திரைக்கு வர காத்திருக்கிறது பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, நாசர், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன், சோழ மன்னர்களின் வரலாற்று சம்பங்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த படம் குறித்த சில சர்ச்சைகளும் எழுந்துள்ளது.

பாகுபலி படத்திற்கு நிகராக பொன்னியின் செல்வன் படத்துக்கு பில்டப் கொடுக்கப்பட்டாலும், இந்த படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்பதால், படத்தை அதிக விலை கொடுத்து வாங்க யாரும் முன் வராததால், பொன்னியின் செல்வன் படத்தின் வியாபாரம் மந்தமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இருந்தும் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் முக்கிய பிரபலங்களை அழைத்து படத்தை ப்ரோமோஷன் செய்து விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் நடிப்பதாக இருந்துள்ளது. சிம்பு நடிப்பதை தெரிந்து கொண்ட நயன்தாரா, அவர் நடித்தால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை என இயக்குனர் மணிரத்தினத்திடம் தெரிவித்துள்ளார். நயன்தாரா படத்தில் நடித்தால் படத்துக்கு கூடுதல் முக்கிய துவம் கிடைக்கும் என்பதால் நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலகுவதை விரும்பவில்லை மணிரத்தினம்.

இந்த தகவல் அறிந்த சிம்பு, நேரடியாக மணிரத்தினத்திடம் பேசியுள்ளார், பரவாயில்லை சார், நான் இந்த படத்தில் இருந்து விலகி கொள்கிறேன், எனக்கு பதில் வேறு ஒரு நடிகரை வைத்து படம் பண்ணுங்க, அடுத்து ஒரு ப்ராஜெக்டில் நாம் இணைந்து வேலை செய்வோம் என தெரிவித்துள்ளார் சிம்பு, இதனை தொடர்ந்து சிம்புவுக்கு பதில் வேறு ஒரு நடிகரை தேர்வு செய்துள்ளார் மணிரதத்தினம், ஆனால் படத்தின் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து நயன்தாராவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

அதனால் மீண்டும் ஒரு முறை கதையை இயக்குனரிடம் கேட்க, இந்த படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லை, இதில் தான் நடித்தால் என்னுடைய மார்க்கெட் மிக பெரிய சரிவை சந்திக்கும் என பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார், ஆனால் தயாரிப்பு நிறுவனம் சம்பளம் அதிகரித்து தருவதாக கூட தெரிவித்தும். பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க திட்டவட்டமாக நயன்தாரா மறுத்துவிட்டதாகவும் இதன் பின்பு அவருக்கு பதில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்த நிலையில், தனக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை என நடிகர் விக்ரம் அதிருப்தியில் பொன்னியின் செல்வன் டீசர் வெளியிட்டு விழாவை புறக்கணித்துள்ள நிலையில், நல்ல வேலை மணிரத்தினத்திடம் இருந்து நயன்தாரா தப்பித்து அவர் மார்க்கெட்டை தக்க வைத்து கொண்டார், விக்ரம் பாவம் சிக்கி கொண்டார், படம் வெளியான பின்பு தான் தெரியும் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகளில் மார்க்கெட் நிலவரம் என்கிறது சினிமா வட்டாரங்கள்.

ஓவர் டார்ச்சர்… விஜய் முகத்தில் அடித்தது போல் பேசிய மேனஜர்…உங்க வேலையே வேண்டாம்..ஏன் தெரியுமா.?