நன்றி இல்லாமல் நடந்து கொண்ட நயன்தாரா… வருத்தத்தில் அட்லீ…

0
Follow on Google News

நடிகர்களில் அஜித் போல, நடிகைகளில் நயன்தாராவும் எந்தவொரு படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ப்ரோமோஷன் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொள்ளாமல், அவ்வப்போது விருது வழங்கும் நிகழ்சிகளில் மட்டுமே கலந்து கொள்ளவதை வழக்கமாகக் கொண்டு அலாதியாகவே இருந்து வந்திருக்கிறார்.

ஆனால், தன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட ‘Connect’ படத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் பொருட்டு வரிசையாக ப்ரோமொஷன்களில் கலந்து கொண்டு உரையாடி வந்தார். இந்நிலையில், தற்போது இந்தியில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா, சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்பது ரசிகர்களிடையே நெகட்டிவ் ஆன விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

ஒரு காலத்தில் சிம்பு, பிரபுதேவா போன்ற நடிகர்களுடன் அதிகம் கிசுகிசுக்கப்பட்டு, அதனால் பட வாய்ப்புகளும் குறைந்து, தமிழ் சினிமாவில் இருந்து தள்ளியிருந்த நயன் தாராவிற்கு இயக்குநர் அட்லீதான் ராஜா ராணி படத்தின் மூலமாக கம்பேக் கொடுக்க வைத்துள்ளார். அதனையடுத்து, நடிகர் விஜய்யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படத்திலும் நயன்தாராவையே நடிக்க வைத்தார். அத்துடன் நின்றுவிடாமால், தற்போது பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக்கி அட்லி அழகுபார்க்கிறார்.

இவ்வாறு அடுத்தடுத்து நயன்தாராவிற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்கி வரும் இயக்குனர் அட்லீக்கு நன்றியுடன் இருக்கும் வகையிலாவது ஜவான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால், நயன்தாரா அதைச் செய்யவில்லை என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், இந்த வயதிலும் தனது படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து நிகழ்ச்சியில் ஷாருக்கானே கலந்து கொள்கிறார்.

ஆனால், நடிகை நயன்தாரா மட்டும் ஏன் சினிமா புரமோஷன்களில் கலந்து கொள்ள மாட்டேன் என அடம்பிடிப்பது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. அது எப்படி? சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் புரமோஷனுக்கு மட்டும் சுற்றுப்பயணம் சென்று விட்டு, ஷாருக்கானின் ஜவான் படத்தின் புரமோஷனை புறக்கணிக்கலாம்?

ஜெயிலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கூட நடிக்காமல், ஒரேயொரு காவாலா பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை தமன்னாவே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ஆனால், தான் ஹீரோயினாக நடிக்கும் ஜவான் படத்திற்கு நயன்தாரா வரவில்லை என்று ரசிகர்கள் கம்பேர் செய்து கலாய்த்து வருகின்றனர். தற்போது, ப்ரோமொஷனுக்கு நயன்தாரா வராத நிலையில், நடிகை பிரியாமணி தனது லியோ பேச்சால் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் கவர்ந்து கைதட்டல்களை குவித்து வருகிறார்.

ஆம், ஜவான் படத்தின் இசையமைப்பாளரான ராக்ஸ்டார் அனிருத் பற்றி நடிகை பிரியாமணி பேசுகையில், ஜெயிலர், ஜவான் அடுத்து லியோ என கூறியிருக்கிறார். லியோ என்ற வார்த்தையைக் கேட்டதுமே அரங்கில் இருந்த விஜய் ரசிகர்கள் சில நிமிடங்கள் அவரை பேச விடாமல் லியோ.. லியோ என கத்தி வெறித்தனம் காட்டியிருக்கின்றனர்.