விக்னேஷ் சிவன் செய்த மிக பெரிய தவறு…திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நயன்தாரா…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் முதன்முதலில் 2005 இல் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அடுத்தடுத்து ரஜினி, விஜய், சூர்யா, அஜித் என கோலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நயன்தாரா வரிசையாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நயன்தாராவின் மார்க்கெட் படிப்படியாக உயரத் தொடங்கியது. இப்படி முழுக்க முழுக்க திறமையை மட்டுமே வைத்து சினிமாவில் தனக்கென அங்கீகாரம் பெற்றுள்ள நடிகை நயன்தாரா, பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆனால்,எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து மணம் முடித்தார்.

இருவரும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் ஷூட்டிங்கின் போது காதலித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு, நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியினர் உல்லாசமாக டூர் சென்று வந்த புகைப்படங்கள் சில சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருந்தது. நடிகை நயன்தாரா சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இல்லாத போதிலும், இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது, சோஷியல் மீடியாக்களில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான விஷயத்தையும் நடிகர் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். தங்களின் உயிர், உலக் என்ற இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கூட சமீபத்தில் விம்ரசையாகக் கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகியது. இவ்வாறு சினிமாவையும் தாண்டி தனக்கென அழகான குடும்பத்தை உருவாக்கிக் கொண்ட நடிகை நயன்தாரா, தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருப்பதோடு, அவர்களின் எதிர்காலத்திற்காக பல்வேறு பிஸ்னஸ்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு, தனக்கான வாழ்க்கைத் துணையை கரம்பிடித்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நயன்தாராவின் இந்த நிலைக்கு விக்னேஷ் சிவன் தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் நயன்தாரா சிகிச்சை பெற்று வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை நயன்தாரா சாப்பிட்டதாகவும், அந்த உணவு செரிக்காமல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் நடிகை நயன்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் சிகிச்சை பெற்ற சில மணி நேரங்களிலேயே நயன்தாரா நலமாகி விட்டதால், அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இது தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.