அடி மேல் அடி… அடி தாங்க முடியமால் நயன்தாரா எடுத்த திடிர் முடிவு.. விக்னேஷ் சிவன் செய்தது சரியா.?

0
Follow on Google News

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் ஏழு வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர், விக்னேஷ் சிவனை நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நேரத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் டாப் ஒன் நடிகையாக வலம் வந்தார். மேலும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்று தான் நடிகை நயன்தாரா திட்டமிட்டு இருந்தார்.

அதற்கு ஏற்றார் போல் திருமணத்திற்கு பின்பும் தன் கைவசம் அதிக படங்களை வைத்திருந்தார் நயன்தாரா, மேலும் திருமணத்திற்கு முன்பே நயன்தாரா கமிட் செய்யப்பட்ட ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களும் கைவசம் இருந்தது. இந்த நிலையில் நயன்தாரா திருமணம் முடிந்த பின்பு தன் கைவசம் இருந்த படங்களில் ஏற்கனவே படப்பிடிப்பில் கலந்து கொண்ட படத்தின் படப்பிடிப்புகளின் மட்டுமே தொடர்ந்து கலந்து கொண்டார்.

ஆனால் புதியதாக நயன்தாரா கமிட்டான படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த பல படங்களில் இருந்து நயன்தாரா வெளியேற்றப்பட்டார், இதனால் நயன்தாராவுக்கு மிகப்பெரிய அளவில் பட வாய்ப்புகள் குறைந்தது, மேலும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டு நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவேன் என திட்டமிட்டிருந்த நயன்தாரா கனவு பாலாய் போனது.

நயன்தாரா திருமணத்திற்கு முன்பு ஜாக்பாட் அடிப்பது போல் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கு சம்பளம் பல மடங்கு அதிகரித்து கொண்டே சென்றது. மேலும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்து வந்த நயன்தாராவுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்பு அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.

தன்னுடைய திருமண நிகழ்வை ஓடிபி தளத்திற்கு சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து முடிந்த நிலையில், திருமணம் முடிந்த பின்பு அந்த நிறுவனம் நயன்தாரா சொன்ன விலைக்கு அவர்களுடைய திருமண நிகழ்வை வாங்க மறுத்துவிட்டது, மேலும் மிகக் குறைந்த விலைக்கு கேட்க இதனால் நயன்தாராவுக்கு அந்த நிறுவனத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இதுவரை நயன்தாராவின் திருமணம் நிகழ்வு ஒளிபரப்பாகவில்லை.

இதனால் நயன்தாராவுக்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை இழப்பு என கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்பு அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு மிகப்பெரிய அவமானத்தை பெற்று தரும் விதத்தில் தற்பொழுது பலத்த அடி வாங்கியுள்ளார் நயன்தாரா. நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் தற்பொழுது அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு வேற ஒரு இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் நயன்தாராவின் இமேஜிற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்த நேரம் அவர்களின் ஜாதகப்படி சரியில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டிய நேரத்தில் இருந்து அடி மேல் அடி வாங்கி கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜோதிடர் சில அறிவுறுத்தலின் படி பரிகாரம் செய்ய சில முக்கிய கோவிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி, என்ன செய்வது என்றாலும், முதலில் பரிகாரம் செய்து முடித்து விட்டு, மேலும் குறிப்பிட்ட தேதி வரை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபட கூடாது என ஜோதிடர்கள் எச்சரித்துள்ளதால், அந்த கால கெடு முடியும் வரை தொழில் ரீதியாக எந்த ஒரு முயற்சியிலும் எடுபடாமல் அமைதியாக இருப்பது என தம்பதியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.