உன் பண திமிரை யாரிடம் காட்டுகிறாய்…. நயன்தாராவிடம் அசிங்கப்பட்ட லெஜெண்ட் சரவணா..!

0
Follow on Google News

தீபாவளி போன்ற பண்டிகை வந்தாலே போதும், கையில் பிடிக்க முடியாது நம்ம சரவணா ஸ்டார் அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன் அருள் அவர்களை. அவருடை கடையின் விளம்பரத்துக்காக இளம் முன்னணி நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணன் அருளின் விளம்பரம் படங்களை பார்த்து கேலி, கிண்டல் செய்த மக்கள், இவர் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என் கிண்டல் செய்தனர்.

சரவணா ஸ்டார் விளம்பர படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இருவரும் சினிமாவில் படம் இயக்கும் வாய்ப்புக்காக, நீங்கள் சினிமாவில் நடிக்க எங்களிடம் அருமையான கதை இருக்கு என லெஜெண்ட் சரவணனை உசுப்பேத்தி விட்டனர். மக்கள் கிண்டல் செய்வதை சீரியசாக, உன்மையில் நாம் சினிமாவில் நடித்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என நம்பி, சினிமாவில் நடிக்க தொடக்கியுள்ளார் லெஜெண்ட் சரவணன் அருண்.

இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். காசு இருந்தால் போதும் ஹீரோவாகிவிடலாம் என்ற கனவில் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் மிகப்பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் முதலில் நடிகை நயன்தாரா தான் சரவணன் அருள்க்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது, பல முன்னணி நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்து விளம்பர படத்தில் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட சரவணன் அருள், முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவுடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என துடியாய் துடித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் சரவணன் அருள் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லாத நடிகை நயன்தாரா கால் சீட் இல்லை என தெரிவித்துவிட்டார். இருந்தும் சரவணன் அருள் விடுவதாக இல்லை.பணத்தால் எதையும் வாங்கி விடலாம் என்கிற உறுதியுடன், மேலும் பல முன்னணி நடிகைகள் பணத்தை கொஞ்சம் அதிகமாக தூக்கி எறிந்ததும் தண்னுடன் வந்து ஜோடி சேர்ந்து விளம்பர படங்களில் ஆட்டம் போட்டதை நினைவில் கொண்டு.

இதே போன்று நயன்தாரவை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து விடலாம் என்கிற பண திமிரில் நயன்தாரவை நேரில் கால் சீட் கேட்டு சென்றுள்ளார். ஆனால் நயன்தாரா ரெம்ப பிசியாக இருக்கேன் கால் சீட் தர முடியாது என மறுத்துள்ளார். உடனே இரண்டு படத்துக்கான சம்பளத்தை ஒரே படத்தில் தருகிறோம் என சரவணன் அருள் தெரிவிக்க, வெளிய போங்க என ஒரே வார்த்தையில் அவமானப்படுத்தி நயன்தாரா அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

உன் அரசியல் நம்மகிட்ட வேண்டாம்.. விஜய்க்கு ஆப்பு வைத்த பீஸ்ட் பட தயாரிப்பாளர்..! என்ன நடந்தது தெரியுமா.?