நயன்தாராவிடம் எப்படி இத்தனை கோடி பணம்…160 வீடுகள் கொண்ட அடுக்குமாடி…

0
Follow on Google News

நயன்தாரா சினிமாவில் நடிக்கும் பணத்தில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருகின்றவர், அந்த வகையில் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் தொழில் முதல், துபாயில் முதலீடு செய்துள்ளது வரை சர்வேதேச தொழில் அதிபராக பல கோடி சம்பாரித்து வரும் நயன்தாரா தற்பொழுது பலரும் வியக்கும் வகையில் புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் நயன்தாரா தற்பொழுது கேரளாவில் சுமார் 160 வீடுகள் கொண்ட மிகப்பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்த நிலையில் அந்த மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தின் அனைத்து வேலைகளையும் பொறுப்பாக பார்த்துக் கொள்வதற்காக விக்னேஷ் சிவனை நிரந்தரமாக கேரளாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் நயன்தாரா.

கேரளாவில் இருந்து கொண்டே அந்த வீட்டிற்கு தேவையான அப்ரூவல், இன்ஜினியர்களுடன் ஆலோசித்து அந்த கட்டிட வரைபடங்கள், மற்றும் இந்த கட்டிடத்துக்கான மொத்த பட்ஜெட் என பிசியாக இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன். குறிப்பாக ஒரு பத்து வீடுகள் கொண்ட குடியிருப்பு என்றால் மிகப்பெரிய சிரமம் இல்லை, ஆனால் 160 வீடுகள் கொண்ட மிகப்பெரிய அடக்குமாடி கட்டிடம் என்பதால் இதற்கு பெரும் தொகையும் செலவாகும்.

அந்த வகையில் தன்னிடம் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை வைத்து மிகப் பெரிய இடத்தை வாங்கிய நயன்தாரா, அதில் ஆரம்ப கட்டமாக கட்டிடத்தை கட்டும் பணிகளை தொடங்கி விட்டார். இதன் பின்பு கட்டிட வேலை தொடங்கியதும், அடுத்தடுத்த பணிகளுக்கு கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை போட்டு அந்த கட்டிடத்தை கட்டக்கூடாது என முடிவெடுத்துள்ளார் நயன்தாரா.

இந்த நிலையில் அடுத்தடுத்து சினிமா வில் நடித்து அதில் வரும் வருமானம், இதற்கு முன்பு தொழில் ரீதியாக பல முதலீடு செய்துள்ள நயன்தாரா, அதன் மூலம் வருகின்ற லாப பணத்தில் வைத்து சுமார் 160 குடியிருப்பு கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தை கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் தற்பொழுது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எந்த மொழிகளிலும் வாய்ப்பு கிடைத்தாலும் உடனே கமிட்டாகும் முடிவில் இருக்கிறாராம் நயன்தாரா.

இந்நிலையில் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸில் ஒரு ரவுண்டு வர இருக்க திட்டமிட்டுள்ள நயன்தாரா, அதில் வரும் பணத்தை வைத்து தற்பொழுது கேரளாவில் நயன்தாரா கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் தற்பொழுது அடுக்கு மாடி கட்டிடம் கட்டி அதில் உள்ள வீடுகளை விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியுள்ள நயன்தாரா.

இதற்கு முன்பு, சிறு தொழில் முதல் துபாய் வரை முதலீடு செய்து, ஒரு நடிகையாக மட்டுமில்லாமல், தொழில் அதிபராகவும் வெற்றி நடை போட்டு வரும் வரும் நயன்தாரா, அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்கும் தொழிலும் இறங்கியுள்ளார், மேலும் தற்பொழுது கட்ட நயன்தாரா கட்ட தொடங்கியுள்ள 160 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தை கட்டி முடித்து விற்பனை செய்த பின்பு, அடுத்தடுத்து இதே போன்று இடங்களை வாங்கி அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நயன்தாரா அதற்கான முழு பொறுப்பையும் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனிடம் ஒப்படைத்துள்ளாராம்.

அந்த வகையில், கணவர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்த படம் கை நழுவி போனதை தொடர்ந்து, மீண்டும் சினிமாவில் விக்னேஷ் சிவனுக்கு படவாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில், தன்னுடைய முயற்சியில் தற்பொழுது கணவர் விக்னேஷ் சிவனை தொழில் அதிபராக்கும் முயற்சியில் இடங்கியுள்ளார் நயன்தாரா என்கிறது சினிமா வட்டாரங்கள்..