வாய்ப்பு வேண்டுமா.. என் கூட படு.. நயன்தாராவை படுக்கைக்கு அழைத்து பற்றி வெளிப்படையாக பேசிய நயன்தாரா..

0
Follow on Google News

இயக்குனர் ஹரி இயக்கத்தில், ஐயா படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருதேன் என்ற பாடல் மூலம் தமிழக இளைஞர்களை தன் வசப்படுத்தியவர் நயன்தாரா. வல்லவன் படத்தில் நடிகர் சிம்பு காதலில் விழுந்தவர் பின் குறுகிய காலத்தில் சிம்புவை விட்டு பிரிந்தார். இதன் பின்பு நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை சென்ற நயன்தாராவின் இரண்டாவது காதலும் முறிந்தது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்த போது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார், 7 ஆண்டுகள் காதலித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயந்தாரா குறித்த அவர் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் தற்பொழுது வெளியகியுள்ளது. நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் போது அவருக்கு பாதுகாப்புக்காக அவரை சுற்றி பவுன்சர்கள் இருப்பார்கள.

அதேபோன்று நயன்தாரா கேரவன் உள்ளே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது பவுன்சர் என்று அழைக்கப்படும் பாதுகாவலர்கள் எப்போதும் கேரவனுக்கு வெளியில் யாரையும் உள்ளே அனுமதிக்காதபடி அமர்ந்திருப்பார்கள். ஆனால், அன்று பவுன்சர்கள் கவனக்குறைவாக சிறிது தொலைவில் நின்று கொண்டிருந்தபோது, நயன்தாராவுக்கு நன்கு பரீட்சையமான இயக்குனர் ஒருவர் அனுமதி இன்றி நயன்தாராவு ஓய்வு எடுத்து கொண்டிருந்த கேரவன் உள்ளே அத்துமீறி சென்றுள்ளார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நயன்தாரா கடும் ஷாக் ஆகி உள்ளார். அந்த இயக்குனரை உள்ளே அமர வைத்துவிட்டு, கேரவன் மற்றொரு கதவு வழியாக வெளியே வந்துவிட்டார் நயன்தாரா. சற்று தூரமா நின்ற பௌன்சர்களை அழைத்து மிக கடினமாக திட்டியுய நயன்தாரா, என்ன வேலை பார்க்கிறீர்கள், நாகரிகம் இல்லாமல் ஒருவர் அத்துமீறி உள்ளே வந்துள்ளார்.

உடனே உள்ளே சென்று அவரை வெளியே அப்புறப்படுத்துங்கள் என நயந்தாரா கோபமாக பேசியதை தொடர்ந்து உள்ளே சென்ற பவுன்சர்கள் அங்கே அமர்ந்திருந்த நயன்தாராவுக்கு ஏற்கனவே பரிச்சயமான அந்த இயக்குனரை வெளியேற்றி உள்ளார்கள் என்கிற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது, இந்நிலையில் தற்பொழுது நயன்தாரா பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ ஓன்று வெளியேறி உள்ளது.

அதில், தான் இயக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உனக்கு தருகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று நயன்தாராவிடம் ஒருவர் கூறினார். ஆனால் அதற்கு முடியாது என்று தைரியமாக கூறிவிட்டேன் என தெரிவித்துள்ள நயன்தாரா, என் திறமைக்காக மட்டும் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன் என தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்து பற்றி பேசியுள்ளார் நயன்தாரா.