நயன்தாராவை கூப்பிட்டு வெச்சு அசிங்க படுத்துவதா.? ஷாருக்கான் உடன் சேர்த்து அட்லீயும் இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

தென்னிந்திய சினிமாவில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்து மொழிப் படங்களிலும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள நயன்தாராவை கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இப்படி கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை நயன்தாராவிற்கு இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கானுடன் சேர்ந்து நடிப்பது மட்டுமின்றி, பாலிவுட்டில் தடம் பதிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜயின் வில்லு படத்திற்குப் பிறகு, பிரபுதேவா உடனான சர்ச்சைக்குரிய உறவால் பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் சினிமாவிலிருந்து விலகியே இருந்த நயன்தாராவை இயக்குனர் அட்லீதான் ‘ராஜாராணி’ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கச் செய்தார்.

தற்பொழுது, தான் இயக்கம் ஜவான் படத்திலும் நடிகை நயன்தாராவை நடிக்க வைத்து பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்படி இருக்கின்ற நிலையில், நடிகை நயன்தாரா ஜவான் திரைப்படம் மூலம், அப்படத்தின் இயக்குனர் அட்லீ மீது கோவமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தில் நயன்தாராவின் சில நீக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்லலால், படத்தின் மற்றொரு நாயகியான தீபிகாவின் படுகோனேவின் கதாபாத்திரம் உயர்த்தப்பட்டு, நயன்தாராவின் கதாப்பாத்திரம் கணிசமாக ஒதுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்து விட்டது!! ஜவான் படத்தின் மூலம், பாலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து கொடிகட்டிப் பறக்கலாம்!! என்ற மிகப்பெரிய கனவோடு வந்த நடிகை நயன்தாராவிற்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அதாவது, ஜவான் படத்தில் தனக்கு மிகப்பெரிய ரோல் இருப்பதாகக் கூறிவிட்டு, இப்போது முழுக்க முழுக்க நடிகை தீபிகா படுகோனின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நயன்தாரா இயக்குனர் அட்லீ மீது கடும் கோவத்தில் இருந்து வருகிறாராம். குறிப்பாக, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஷாருக்கான் தீபிகா படுகோனைப் பார்த்து, “உங்களுக்கு சின்ன ரோல் என்று சொல்லி பிராங்க் பண்ணிட்டோம், எங்களை மன்னிச்சுக்கோங்க” என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறியது போல, ஜவான் படத்தில் தீபிகா படுகோனின் கதாப்பாத்திரத்தைப் பார்க்கும் போது, இந்தப் படம் நயன்தாரா – ஷாரூக் படம் போல இல்லாமல், தீபிகா – ஷாரூக் படம் போலத்தான் இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், இதனால் தான் நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் ப்ரோமோசன் நிகழ்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார் என்றும் இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எவ்வாறாயினும், பாலிவுட் உலகின்பாஷாவாக பார்க்கப்படும் ஷாரூக் கான், படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக செல்லும் இடமெல்லாம், நயன்தாராவையும், அவருடைய நடிப்பையும் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.