நயந்தாரா மார்க்கெட் காலி… பட வாய்ப்புக்காக விக்னேஷ் சிவன் செய்த டுபாக்கூர் செயல் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் இருவரும் சுமார் ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிரம்மாண்டமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு நயன்தாராவின் மார்க்கெட் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பின்பு நயன்தாராவின் மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது.

இதற்கு காரணம் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தில் நயன்தாராவை விட சமந்தா அழகாக தோற்றமளித்ததால் நயன்தாராவுக்கு வரவேண்டிய புதிய பட வாய்ப்புகளை சமந்தா தட்டி சென்று கொண்டிருக்கிறார். திருமணம் முடிந்து தாய்லாந்து ஹனிமூன் சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி ஹனிமூன் முடித்துவிட்டு ஷாருக்கான் நடிக்கும் மும்பை படப்பிடிப்பில் கலந்து கொண்டார் நயன்தாரா.

திருமணம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இந்த இடைப்பட்ட காலத்தில் புதியதாக நயன்தாராவுக்கு எந்த ஒரு பட வாய்ப்பு வரவில்லை. திருமணத்திற்கு முன்பு ஒப்பந்தமான படங்களில் தான் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் கணவர் விக்னேஷ் உடன் திடீர் பயணமாக வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா.

இழந்த நயன்தாரா இருந்த மார்க்கெட்டை மீட்கும் முயற்சியில் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் விக்னேஷ் சிவன் போட்ட பலே திட்டம் ஒன்று வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து பல்வேறு இணையதள ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.

நயன்தாரா வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து யார் ஊடகங்களுக்கு அனுப்புவது என்று சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். இதை விக்னேஷ் சிவன் வீடியோவாக எடுத்து பிரபல முக்கிய சேனல்களுக்கு கொடுத்து அதை வெளியிட சொல்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விடியோவை பில்டப் செய்து புகழ்ந்து வெளியிடுவதற்கு விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து பணம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் நயன்தாராவை ரசிகர் மத்தியில் பரபரப்பாக வைத்துக் கொள்வது, இப்படி நயன்தாராவுக்கு பப்ளிசிட்டி தேடும் வகையில் இது போன்ற செயல்களில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருவது குறித்து, இதெல்லாம் ஒரு பொழப்பா என்கின்றனர் குறிப்பிடத்தக்கது.

பறிபோகிறது சூர்யாவின் தேசிய விருது… இந்திய அளவில் மிக பெரிய அவமானத்தை சந்திக்கும் சூர்யா..!