மனசுல நயன்தாரா நெனப்பு… ஓவர் கண்டிஷன் போடும் சிவாங்கி… செம்ம டென்ஷனில் தயாரிப்பாளர்கள்..

0
Follow on Google News

விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் ரியாலிட்டி ஷோக்கலில் ஆரம்பத்தில் போட்டியாளராக பங்கு பெறுகின்றவர்கள், ஒரு கட்டத்தில் பிரபலமான பின்பு அவர்களின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் கிராமிய பாடகராக கிராமங்களின் நடக்கும் திருவிழாக்களில் நடக்கும் கச்சேரிகளில் பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த கிராமியப் பாடகர் ராஜலட்சுமி – செந்தில் தம்பதியினர்.

இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பின்பு, கிராமங்களில் நடக்கும் கச்சேரிகளை தவிர்த்து சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி தொடங்கினார்கள். மேலும் இவர்களின் பில்டப் மிகப்பெரிய அளவில் இருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமானவர்கள் வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று நன்கு சம்பாரித்து வருகின்றனர்.

அப்படி நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு 1+1 என இரண்டு விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் வசதிகளை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் செய்து கொடுப்பார்கள். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு தனி சம்பளமும் வழங்கப்படும். இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி புகழ் சிவாங்கி மிக பிரபலமாய் உள்ளார்.

அவரை வெளிநாடு நிகழ்ச்சிகளில் இதற்கு முன்பு அழைத்த போது அவரும் அவர் தாயார் மட்டும் செல்வதற்கான விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறைகள் அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தரப்பில் புக்கிங் செய்யப்படும். ஆனால் தற்பொழுது சிவாங்கி ஏகப்பட்ட கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது. அதில் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து விமான டிக்கெட்டுகள்.

உடன் வருகின்றவர்கள் அனைவர்க்கும் ஓட்டல் அறைகள் என என மொத்த குடும்பத்தையும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் செலவில் வெளிநாடு சுற்றுலா சென்று வந்து விடுகிறார் சிவாங்கி. இதனால் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் செம டென்ஷனில் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு வழியின்றி, சிவாங்கி கண்டிஷனை ஏற்றுக்கொண்டு அவரின் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் விமான டிக்கெட்,ஹோட்டல் வசதிகளை செய்து கொடுத்து நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர் என கூறப்படுகிறது.