நயன்தாரா குழந்தை பெற்று கொள்வதில் பிரச்சனை… மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் என்ன தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : தமிழ் திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவும் கமர்சியல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் எட்டாண்டுகளாக காதலித்துவந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சென்னை மகாபலிபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண வைபவத்திற்கு வெகு சிலரே அழைக்கப்பட்டிருந்த போதும் இந்தியா முழுவதும் இவர்களது திருமணம் பேசுபொருளானது.

அதிகம் பேரை அழைக்காவிட்டாலும் தங்களது திருமண நாளன்று விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதிகள் ஒருலட்சம் ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் செய்தனர். அன்றைய திருமண நிகழ்வைவிட இந்த அன்னதானம் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மருத்துவர் ஒருவர் நயன்தாராவால் எப்படி திருமணம் செய்துகொள்ள முடியும் என சர்ச்சைக்குரிய வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடலூர் பகுதியில் மருத்துவராக இருப்பவர் அறிவன்பன். இவர் தனது சமூகவலைத்தளத்தில் நயன்தாரா திருமணத்தை பற்றிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் ” நயன்தாராவின் நடிப்புத்திறமையை நான் பாராட்டுகிறேன். ஆனால் தற்போது நயன்தாராவிற்கு 40 வயதாகிறது. இப்போது எப்படி குடும்பம் குழந்தை என அனைத்து பொறுப்புக்களையும் சுமக்க முடியும்.

அவர் கண்டிப்பாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவருக்கு நல்லது” என அதில் குறிப்பிட்டிருந்தார். இதற்க்கு பதிலடி கொடுத்த பாடகி சின்மயி ” ஒரு மருத்துவராக இருந்துகொண்டு எப்படி இவ்வளவு கீழ்த்தரமாக பேசமுடியும்” என அந்த மருத்துவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஏற்கனவே நயன்தாரா கர்ப்பப்பையில் பிரச்சினை இருந்ததாகவும் அதற்காக கேரளாவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் ஆறுமாத காலங்கள் தொடர் சிகிச்சை மேற்கொண்டதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் அதுகுறித்து நயன்தாரா தரப்பில் எந்த ஒரு மறுப்போ அல்லது விளக்கமோ கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் வந்து அசிங்கப்பட்ட அட்லீ…! இதெல்லாம் ஒரு பொழப்பா காரி துப்பிய சினிமா வட்டாரம்..