மீனா வாழ்க்கையில் ஒளி ஏற்ற… ரஜினி உட்பட மொத்த திறையுலகமும் எடுத்த முடிவு..ஓகே சொன்ன மீனா..

0
Follow on Google News

கடந்த 2009ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் வித்யாசாகர் என்பவரை தன்னுடைய 33வது வயதில் திருமணம் செய்து கொண்டார் நடிகை மீனா , இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வித்யாசாகர் பெங்களூரில் சொந்தமாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வந்துள்ளார். நடிகை மீனா கணவருடன் பெங்களுரில் வசித்து வந்தார். பெரும்பாலும் சென்னையில் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் கணவருடன் பெங்களூரில் தான் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இரண்டு நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கொரோனா தொன்றின் போது மீனா மற்றும் அவரது கணவர் என குடும்பத்தினர் அனைவரும் கொரானா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினர்.

ஆனால் கொரோனா தொன்றில் பாதிக்கப்பட்ட மீனா கணவர் வித்யாசாகர் மட்டும் அதன் பின்பு அடிக்கடி நுரையீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு காரணம், பெங்களூரில் உள்ள அவரது வீட்டை சுற்றி புறாக்கள் அதிகமாக இருப்பதாகவும், புறாக்கள் எச்சம் அவர் வீட்டை சுற்றி அதிகம் காற்றுடன் கலந்துள்ளதால், அந்த புறாக்கள் எச்சம் கலந்த காற்றை சுவாசித்த வித்யாசாகர்க்கு நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது.

புறாக்களின் எச்சம் கலந்த காற்றை அதிகம் சுவாசிக்கும் சில நபர்களுக்கு இது போன்று நுரையீரல் பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு நுரையீரலும் முழவதும் பாதிக்கப்பட்ட நிலையில், மாற்று நுரையீரலுக்காக முளை சாவு அடைத்தவர்களின் நுரையீரல் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அதற்கான வாய்ப்பு அமையவில்லை, இருந்தும் மருத்துவர்கள் போராடியும் மீனா கணவரை காப்பாற்ற முடியாமல் போனது, மீனா குடும்பத்தை மட்டுமில்லை, தமிழ் திரைதுறையினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மீனாவின் சோகத்தில் பங்கேற்ற திரை துறையை சேர்ந்தவர்கள், தொடர்ந்து மீனாவுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள், அந்த வகையில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் தொடர்ந்து மீனா மற்றும் வருடைய மகள் இருவரையும் அடிக்கடி சென்று நேரில் பார்த்து, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை மீனா சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் முடிந்துள்ளதை கொண்டாடும் வகையில், மீனா 40 என்கிற நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார், இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு நடிகை மீனாவும் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.