ஒரே வருடம் தான்… சவால் விடுத்த மஹாலக்ஷ்மி… பரிதாப நிலையில் கணவர் ரவீந்திரன்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான விஜே மகாலட்சுமி, அந்த தொலைக்காட்சியில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் மூலமாக அதிக ரசிகர்களை கவர்ந்திழுத்தார். மற்ற தொகுப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை விட மகாலட்சுமி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகமானதின் காரணமாக, அதிக நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கும் வாய்ப்பை அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மகாலட்சுமிக்கு கொடுத்தது.

இதன் பின்பு சீரியலில் நடிக்க தொடங்கிய மகாலட்சுமி, பல சீரியல்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதனை தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான மகாலட்சுமி, பின்பு கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இதன் பின்பு திருமணம் முடிந்த சீரியல் நடிகர் ஒருவருடன் காதல் கிசு கிசுவில் சிக்கி பின்பு அதை பிரேக் அப் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரனை தற்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரவீந்திரன் ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்து பெற்றவர். ஆகையால் இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். இந்த நிலையில் கோடீஸ்வரர் குடும்பத்தைச் சேர்ந்த ரவீந்திரனிடம் இருக்கும் அதிக அளவு பணம் தான் மகாலட்சுமி அவரின் உடல் பருமனை கூட பொருட்படுத்தமால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் புதுமண தம்பதியினரான மகாலக்ஷ்மி – ரவீந்திரன் இருவரும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், இவர்கள் எந்த அளவுக்கு திருமணத்திற்கு பின்பும் ஒருவர் மீது ஒருவர் அதிக அளவு காதல் கொண்டுள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் பேசிய ரவீந்திரன் நான் தற்பொழுது மகாலட்சுமி பல் விலக்கும் பிரசில் தான் நானும் பல் விலக்கி வருகிறேன்.

இது மகாலட்சுமிக்கு ஒரு இரு நாட்கள் தெரியாமல் இருந்தது, பின்பு அதை கண்டுபிடித்து விட்டார் என்று என்று நகைச்சுவையாக தெரிவித்தது காதல் மனைவி மகாலட்சுமியை எந்த அளவுக்கு காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதுமணத் தம்பதியினராக அனைத்து மீடியாக்களிலும் இடம் பிடித்து வந்த நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினரை தற்பொழுது காணாமல் செய்துவிட்டு அந்த இடத்தை பிடித்துள்ளனர் ரவீந்திரன்- மகாலட்சுமி தம்பதியினர்.

மேலும் போன்று நயன்தாரா ஒரு பெரிய தாலியை வெளியில் அனைவரும் பார்க்கும் படி அணிந்து மாடன் உடையில் மஹாலக்ஷ்மி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்களின் திருமணத்தில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானது, ரவீந்திரனின் உடல் எடை குறைத்து தான். இதுகுறித்து தன்னுடைய தோழிகளிடம் மகாலட்சுமி கூறுகையில்,

என்னுடைய கணவரின் உடல் எடை குறித்து கேலி கிண்டல் செய்து வருகிறார்கள், அவர்கள் முகத்தில் கரியை பூசுவது போன்று, அடுத்த ஒரு வருடத்திற்கு கணவரை கடுமையான உடற்பயிற்சி செய்ய வைத்து, எனது கணவரின் உடல் பருமனை குறைத்து காண்பிக்கிறேன் என்று மஹாலஷ்மி அவரின் நெருக்கிய தோழிகளிடம் சவால் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து திருமணம் ஆன சில நாட்களில், தினமும் அதிகாலை எழுப்பி விட்டு கணவரை உடற்பயிற்சி செய்யச் சொல்வது, நடைப்பயிற்சி செய்து செல்வது என கடும் டார்ச்சர் செய்து வருகிறார் மகாலட்சுமி என்ற தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் நீண்ட நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால், அதிக நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவரான ரவீந்திரனை தினமும் அதிகபட்சம் 6 முதல் 7 மணி நேரம்தான் தூங்குவதற்கு அனுமதிக்கிறாராம் மகாலட்சுமி.

இதனால் திருமணம் முடிந்து மனைவியுடன் ஜாலியாக இருக்கலாம் என்ற கனவில் இருந்த ரவீந்திரன். அதிகாலை உடற்பயிற்சி, நடை பயிற்சி குறைந்த நேரம் மட்டுமே தூங்க அனுமதி என பல கண்டிஷன்கள் போட்டு மனைவி மஹாலஷ்மி கடும் டார்ச்சர் செய்து வருவதாக புலம்பி வரும் ரவீந்திரன். அதே நேரத்தில் மனைவியின் ஆசைக்காக உடல் பருமனை குறைப்பதற்கு மனைவி கொடுக்கும் டிப்ஸ்களையும் ஃபாலோ பண்ண தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.