திருமணத்திற்கு முன்பே அந்த மாதிரி உறவு… மூன்று திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி..

0
Follow on Google News

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் பாஸ்கர் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபல நடிகர் மோகன் சர்மா என்பவரை 1975 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் லட்சுமி. திருமணத்திற்கு பின்பு இருவரும் இணைந்து சினிமாவிலும் நடித்துள்ளார்கள், பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

கடைசியாக நடிகை லட்சுமி நடிகரும் இயக்குனருமான சிவச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி இருக்கும் நிலையில் லட்சுமியின் முன்னாள் கணவரும், நடிகருமான மோகன் சர்மா முன்னாள் பேட்டி ஒன்றில் லட்சுமி உடன் ஏற்பட்ட காதல் முதல் பிரிவு குறித்து பேசி உள்ளார், அதில் பேசிய அவர், “நான் மும்பையில் தான் வசித்து வந்தேன். ஒரு நாள் லக்ஸ் விளம்பரத்தில் நடிக்க நடிகை லட்சுமி மும்பை வந்திருந்தார்.

அப்போது எனக்கு போன் செய்து பேசிய லட்சுமி, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் செய்ய வேண்டும், உங்களால் எனக்கு உதவ முடியுமா என கேட்டார். இதன்பின், நானும் லட்சுமியின் ஷாப்பிங் சென்றோம். அப்போது, ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தக்கூடிய லோஷன் ஒன்றை கையில் எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் விலை அப்போதே ரூ. 500. அந்த லோஷன் நாய் வடிவத்தில் உள்ள பாட்டிலில் இருக்கும்.

அதுவே அதற்கு அழகு. ஆனால், நான் அந்த லோஷனை வாங்கவில்லை, ஷாப்பிங் முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்து இறங்கிய போது, நான் ஆசைப்பட்டு பார்த்துக்கொண்டிருந்த லோஷனை லட்சுமி என் கையில் கொடுத்து, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என்றார். நீங்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தால், இந்த நாய் போல் உங்களது வாழ்க்கையில் நானும் இருப்பேன் என லட்சுமி தெரிவித்ததாக கூறிய அவருடைய முன்னாள் கணவர் மோகன் சர்மா.

லட்சமி என்னை பார்த்து இப்படி கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. காரணம் நான் அப்படியான ஒரு விஷயத்தை லட்சுமியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு எனக்கு சுத்தமாக தூக்கமே இல்லை. உடனடியாக லட்சுமிக்கு போன் கால் செய்தேன். நாளைக்கு மீட் பண்ணனும் என கேட்டேன். அடுத்த நாள் காலையில் அவரை சென்று சந்தித்தேன். அப்போது அவர் எனக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு காத்திருந்தார்.

இருவரும் சாப்பிட சென்றோம். அப்போது மிகவும் ஓப்பனாக திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக என்னிடம் லட்சமி கூறினார். அதன்பின் அவர் ஹோட்டல் ரூமிற்கு என்னை அழைத்து சென்றார். அங்கு சென்ற பின், நடக்கப்போவது என்ன என்று என்னால் கணிக்க முடிந்தது. ஆனால் அதற்கு முன் அவரிடம் குங்குமம் கேட்டேன். அவர் நெற்றில் குங்குமம் வைத்துவிட்ட பின், மற்றவை எல்லாம் நடந்தது. அது எங்களுடைய முதல் இரவாகவும் மாறியது என தெரிவித்த மோகன் சர்மா

அதன்பின் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்த நிலையில், லட்சுமி சில பேருடன் தவறான உறவில் ஈடுபட்டார். இதற்கிடையே அவரது மகள் ஐஸ்வர்யாவிற்கும், லட்சுமிக்கும் இடையே மோதல் நடந்தது. எனக்கும் லட்சமிக்கும் இடையே பிரச்சனைகள் அதிகரித்தது. இருவரும் தனித்தனி பெட்ரூமில் தங்க துவங்கினோம்.

நான் ஒருமுறை விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கும் போது, மகள் ஐஸ்வர்யா என்னிடம் வந்து, அம்மா யாரிடமுமோ அடிக்கடி பேசி கொண்டிருகிறார் என கூறினார். அதில் மனமுடைந்த நான் அப்படியே அந்த வீட்டில் இருந்து வெளியேறினேன்” என லக்ஷ்மியின் முன்னாள் கணவர் மோகன் சர்மா அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.