சிவகார்த்திகேயன் வீட்டிலே தங்கிய கீர்த்தி சுரேஷ்… அதுவும் கீர்த்தி சுரேஷ் அம்மாவுக்கும் தெரியுமா.?

0
Follow on Google News

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. மது, புகை போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார்.

ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுக்கு இருந்த க்ளீன் பாய் இமேஜை டேமேஜ் செய்தார். அவர் அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவருடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அந்த துரோகத்தை வெளியே சொல்லமாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்னவாக இருக்கும் என்று பலரும் தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக இமானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு சிவாதான் காரணம் என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. இமான் வைத்த குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் இமான் மற்றும் சிவகார்த்திகேயன் பற்றிய புதிய பூகம்பம் வெடித்துள்ளது. எந்த மியூசிக் சேனலை திறந்தாலும் கீர்த்தி சுரேஷ் ‘உன் மேல ஒரு கண்ணு.. நான் தான் உன் முறைப்பொண்ணு’ என சிவகார்த்திகேயனை சைட் அடித்துக் கொண்டே பாடிய பாடல் ரஜினிமுருகன் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் டிரெண்டானது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் ஜோடி போட்டு ரெமோ படத்தில் செம பப்ளியாக நடித்திருந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்த சீமராஜா படத்திலும் கீர்த்தி சுரேஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் ராஜா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர்கள் இருவரின் ஜோடிக்கு பல ரசிகர்கள் உண்டு. தற்போது கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் தமிழில் படம் பண்ணுவதே குறைந்து விட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எப்போது மீண்டும் கீர்த்தி சுரேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஜோடி இணையும் என்ற ஆவலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னிலையில் சிவக்கார்த்திகேயன் வீட்டில் கீர்த்தி சுரேஷ் தங்கி இருந்ததாக சிவகார்த்திகேயன் நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.அவர் கூறியதாவது, கீர்த்தி சுரேஷ் சிறிது நாட்கள் சிவகார்த்திகேயன் வீட்டில் தான் தங்கி இருந்தார். அவரின் மனைவியும் கீர்த்தி சுரேஷும் ஒன்றாக தான் இருந்தனர். கீர்த்தி சுரேஷின் தாயாருக்கும் இது தெரியும். அவர்தான் ஒத்துழைப்பை கொடுத்தது. காரணம் சிவகார்த்திகேயன் மிகவும் நம்பிக்கையானவர். இமான் சர்ச்சையில் அவரின் மேல் பல தவறான கருத்துக்கள் கிளம்பியுள்ளன.

ஆனால் அவை எதுவும் உண்மை இல்லை. சிவகார்த்திகேயன் பெண்களை மதிப்பவர். அவர் அவ்வாறு செய்திருப்பார் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை. பெண்கள் விஷயத்தில் சிவகார்த்திகேயன் ஏ ஆர் ரகுமான் போன்று தான். தவறான எண்ணத்தில் செயல்படவே மாட்டார். இமானும் சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்கள். இமான் பற்றிய அந்தரங்கள் எல்லாம் சிவக்கார்த்திகையனுக்கு தெரியும். அதெல்லாம் சிவகார்த்திகேயன் வெளியே கூறி விடுவாரோ என்று அவருக்கு பயம். அதனால்தான் அவர் மீது வீண் பழி போட்டுள்ளார்.

தனுஷ் அனிருத் கூட தான் சிவகார்த்திகேயன் நம்பர்கள். அவர்களைப் பற்றி எங்கேயாவது வாய்விட்டுள்ளாரா? சிவகார்த்திகேயன் அப்படியெல்லாம் பேசுபவர் கிடையாது. மிகவும் நேர்மையான மனிதன். யாரோ கோடிக்கணக்கில் வாங்கிய கடனை இவர் அடைத்து கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மனிதன். சிவகார்த்திகேயனுக்கு தற்போது பெரிய படங்கள் எல்லாம் வருகிறது. அந்தப் படங்களை கெடுத்து விடுவதற்காக தான் இமான் திட்டம் போட்டு இவ்வாறு நடந்து கொள்கிறார்” என்று பேசியுள்ளார்.