கீர்த்தி சுரேஷால் ரஜினிக்கு நேர்ந்த கொடுமை.. அதே தான் சிரஞ்சிவிக்கும்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமானார் தான் கீர்த்தி சுரேஷ். தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால் சோகம் என்னவென்றால் சிவகார்த்திகேயனுடன் வெளியான ரஜினி முருகன் படத்தை தவிர வேறு எந்த ஒரு படமும் கீர்த்தி சுரேஷ்க்கு வெற்றி படமாக அமையவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என்ற பெயரை வாங்கி உள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய போது தன்னை ராசியில்லாத நடிகை என தயாரிப்பாளர்கள் நம்பிய போது தனக்கு கை கொடுத்தது ரஜினி முருகன் படம் தான்.

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. எனது சினிமா வாழ்க்கையே முடியும் என்ற நிலையில் இருந்த போது இப்படம் காப்பாற்றியது எனக் கூறி இருந்தார். சமீபத்தில் தமிழில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த மாமன்னன் படம் வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஏன் இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பிய அளவிற்கு அவர் கதாபாத்திரம் அமைந்தது.

இதற்கு முன்பு அண்ணாத்த படத்தில் ரஜினியின் பாசமான இன்னசெண்ட் தங்கையாக நடித்தார் கீர்த்தி. எப்படியாவது திருப்பாச்சிக்கு நிகரனான ஒரு அண்ணன் – தங்கச்சி செண்டிமெண்ட் படத்தில் நடித்துவிடலாம் என்கிற ஆசை தான். இந்தப் படத்தில் நடிப்பதற்காக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பை விட்டுக்கொடுத்தார் கீர்த்தி.

ஆனால் அண்ணாத்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. சரி ஒரு முறை தவறிவிட்டது. இந்த முறை எப்படியாவது தங்கச்சியாக நடித்து ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை தங்கையாக நடித்தார் கீர்த்தி. தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் லக்‌ஷ்மி மேனன் நடித்து வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் போலா சங்கர் படத்தில் நடிகர் சீரஞ்சீவியின் தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்தப் படமும் படு தோல்வி ஆகி உள்ளது. தொடர்ந்து படங்கள் தோல்வி அடைவதால் மீண்டும் ராசி இல்லாத நடிகையாக கீர்த்தி சுரேஷ் உருவெடுத்துள்ளார். இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் ஆரம்பத்தில் ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமே நடித்துவந்த கீர்த்தி சுரேஷ்‌, படவாய்ப்புகள் இல்லாததால் கிளாமர் கேரக்டர்களிலும் இறங்கி விட்டார். தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும் இவர் அதீத கவர்ச்சியுடன் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கவர்ச்சிக்கு இறங்கியுள்ள கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை அட்லீ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியாகி மிக பெரிய ஹிட் அடித்த தெறி படத்தின் ரீமேக் தான் அட்லீ இயக்க அதில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கும் படம், ஏற்கனவே, தமிழ் தெலுங்கு , மலையாளம் என தொடர்ந்து தோல்வி படங்களை மட்டும் கொடுத்து வந்த கீர்த்தி சுரேஷ் ராசி இல்லாத நடிகை என தென் இந்திய சினிமா ஓரம் கட்டிய நிலையில், தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்றுள்ள கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட் சினிமாவது கை கொடுக்குமா என்பது அவர் நடிக்க இருக்கும் படம் வெளியான பின்பு தான் தெரியவரும் என்பது குறிப்பிடதக்கது.