இரவுவில் மதுரையில் ஹோட்டலில்… பிரபல ரவுடியுடன் நடிகை காயத்ரி ரகுராம் சந்தித்தது எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

மதுரையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் மதுரை வரிசூர் செல்வம், 90 களில் மதுரையில் பல ரவுடிகள் அவர்கேளுக்கென ஒரு அடைமொழியுடன் வலம் வந்தார்கள், அதில் மதுரை வரிசூர் கிராமத்தை சேர்ந்த செல்வம், தன்னுடைய ஊரின் பெயரை அடைமொழியாக இணைத்து கொண்டு வரிசூர் செல்வமாக வலம் வந்தார், ஒரு பொது இடத்திற்கு வரிசூர் செல்வம் வருகிறார் என்றால், கடந்த 30 வருடங்களுக்கு முன்பே அனைவரின் பார்வை வரிசூர் செல்வத்தை நோக்கும்.

அந்த வகையில் தற்பொழுது கிலோ கணக்கில் நகைகளை சுமர்ந்து பொது இடத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வரும் வரிசூர் செல்வம், 30 வருடங்களுக்கு முன்பே இது போன்று வித்தியசமாக தன்னுடைய தோற்றத்தை வெளிப்படுத்தி கொண்டவர், இவருடைய கால கட்டத்தில் இருந்த பல ரவுடிகள் அடையாளம் தெரியாமல் போனாலும் கூட, இன்று வரிசூர் செல்வம் வாழ்க்கையை ரசித்து ருசித்து வாழ்வதற்கு காரணம், இவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் யாரும் கிடையாது என்கின்றனர் வரிசூர் செல்வத்தை நன்கு அறிந்தவர்.

கட்ட பஞ்சாயத்துக்கு பெயர் போனவர் வரிசூர் செல்வம், இவரிடம் ஒரு பஞ்சாயத்து சென்றால், அந்த பஞ்சாயத்துக்கு நியாயமான தீர்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் வரிசூர் செல்வத்தை சந்தித்து தங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு பெற்று உள்ளார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் இடம்பெற்ற பாடலில் உள்ள போன அத்தனை பேரும் குற்றவாளி இல்லீங்க, வெளியே உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க என ரஜினிகாந்த் பாடியிருப்பார்,

அது போல தன்னுடைய வாழ்க்கையில் பல நாட்கள் சிறையில் வரிசூர் செல்வம் கழித்திருந்தாலும், அவருடைய கருணை மனம் குறித்து அறிந்தவர்கள் கூறும் போது, பண்டிகை நாட்களில் தன்னுடைய தோப்பிற்கு ஏழை எளிய மக்களை நேரில் அழைத்து அவர்களுக்கு பணம் உதவி செய்து, என்னை போல் நீங்களும் மகிழ்ச்சியாக பண்டிகை கொண்டாடுங்கள் என்று வாழ்த்தி ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பதற்கு எடுத்து காட்டு வரிசூர் செல்வம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரபல ரவுடி வரிசூர் செல்வம் மற்றும் காயத்ரி ரகுராம் குறித்து ஒரு தகவல் வைரலாகி வருகிறது. பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம் – வரிசூர் செல்வம் இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட திருச்சி சூர்யா, நீ எங்க போன வந்த என்பதும் எல்லோருக்கும் தெரியும், ராத்திரி அதுவும் ரவுடி கூட தோப்புல உனக்கு என்ன வேலை என காயத்ரியை கேள்வி எழுப்பிய திருச்சி சூர்யா,

மேலும் நீதானே போட்டோ வீடியோ கேட்டுக்கிட்டே இருந்த.இதுக்கு மேலயும் ஏதாச்சு பேசுனா.? இதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் வெளியில வரும் என நடிகை காயத்ரி ரகுராம், மற்றும் வரிசூர் செல்வம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் பிரபல ரவுடி உடன் இரவு நேரத்தில் அதுவும் பின்புறம் தோப்பு போன்று காட்சியளிக்கும் இடத்தில காயத்ரி ரகுராம் க்கு என்ன வேலை என பலரும் பலவிதத்தில் தகவலை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் வரிசூர் செல்வம் மற்றும் காயத்ரி ரகுராம் சந்திப்பு குறித்து விசாரித்ததில், பொதுவாக மதுரையில் இரவில் பிரபல ஹோட்டல்களில் சென்று வரிசூர் செல்வம் தனக்கு பிடித்தமான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம், அந்த வகையில் மதுரை பேல் ஹோட்டலில் வரிசூர் செல்வம் இரவு நேரத்தில் சாப்பிட சென்ற போது, அதே நேரத்தில் நடிகை காயத்ரி ரகுராம் சக சினிமா துறையை சேர்ந்தவர்கள் உடன் அங்கே வந்துள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும், வரிசூர் செல்வம் மற்றும் காயத்ரி ரகுராம் இருவருடைய சந்திப்பு எதார்த்தமான சந்திப்பு தான் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.