திருமணம் செய்து குழந்தை பெத்துக்க ஆசையாம்.. இளம் அமைச்சர் அழகை வர்ணித்து ஒப்பான பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்…

0
Follow on Google News

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாள திரையுலகிலும் புலிமடா படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே மலையாளத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு ரவுண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நடிப்பில் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க போன்ற படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. அதுமட்டுமின்றி மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இலங்கை நுவரெலியா மாவட்டத்தில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு வந்ததை எடுத்து அதில் கலந்து கொண்டார் அவருடன் நடிகைகள் ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், அமைச்சர் ஜீவன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “நான் நினைத்தது போல பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது.

அமைச்சர் என்று சொன்னவுடன், அவர் வயதான நபராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு வயது மிகவும் குறைவு. ரொம்ப அழகாகா இருக்கிறார். முதல் முறையாக குறைவான வயதில் ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார்.. அமைச்சர் ஜீவன் பல நல்ல விஷயங்களை செய்து வருவதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். இதனால் மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.எனக்கு திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெத்துக்கணும் என்ற ஆசை இருக்கிறது” என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

இதை அறிந்த நெட்டிசன்கள், எப்போது திருமணம்? யாரையாவது காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு வருகிறார்கள். 29 வயதான இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் எம்பியாக தேர்வு செய்யப்பட்டு தற்போது இலங்கையின் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.