விஜயகாந்த் குடும்பத்தை வைத்து பப்ளிசிட்டி தேடும் விஷால்… எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை…

0
Follow on Google News

விஜயகாந்த் மரணம் அடைந்து நாட்கள் கடந்தாலும், இன்னும் மக்கள் அந்த சோகத்தில் இருந்து மீண்டு வரவில்லை, விஜயகாந்த் உச்ச நடிக்கராக, ரஜினி, கமலுக்கு இணையாக இருந்த காலத்தில், நடிகர் விஜய் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போது, செந்தூரபாண்டி படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்து அவருக்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த்.

அதே போன்று நடிகர் சூர்யா சினிமாவில் போராடி கொண்டிருந்த காலத்தில், விஜய்க்கு சினிமாவில் வாழ்கை கொடுத்தது போன்று, பெரியண்ணா படத்தில் சூர்யா உடன் இணைந்து நடித்து அவருடைய சினிமா வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைத்தவர் கேப்டன் விஜயகாந்த். இப்படி பலருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் போராடி கொண்டிருக்கையில், விஜயகாந்தால் உச்சத்திற்கு சென்றவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்கிற கோபம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியனுக்கு நடிகர் விஷால் உதவி செய்வதாக தற்போது தெரிவித்துள்ளது, பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், “பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த்.

அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ‘உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்’, என்று விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமா வளர்ச்சிக்கு உதவி செய்ய போவதாக விஷால் பேசினார்.

ஆனால் விஷால் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களுமே ஓடவில்லை. விஷாலை வைத்து படம் எடுக்கவே தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரும் ஓட்டம் எடுத்து வருகிறார்கள், இந்நிலையில் சண்முகப்பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கூட, அந்த படத்தில் விஷால் நடிப்பதாக இருந்தால், இந்த ப்ரொஜெக்ட் வேண்டாம் என தெரிவித்து ஓடி விடுவார்கள்.

பொதுவாக சண்முக பாண்டி நடிக்கும் படத்தில், இன்று மார்க்கெட் உச்சத்தில் இருக்க கூடிய, விஜய், ரஜினி, அஜித் போன்ற நடிகர்கள் கெஸ்ட் ரோலாக வந்து நடித்தால், அந்த படத்திற்கு வரவேற்பு இருக்கும், மேலும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் சினிமா வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கும், ஆனால் மார்க்கெட் இழந்த நடிகர்கள், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோலாக நடிக்க தயார் என பேசி, இழந்த மார்கெட்டை மீட்கும் முயற்சி தான் இது என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சண்முக பாண்டியன் என்கிற ஒரு நடிகர், சினிமாவில் வெற்றிக்காக போராடி கொண்டிருக்கிறார் இதுவரை என்பது மக்களுக்கு இதற்கு முன்பு தெரியாமல் இருந்து இருக்கலாம், ஆனால் கேப்டன் மறைந்த பின்பு மக்கள் அவரை அடையாளம் கண்டு விட்டார்கள், சண்முக பாண்டியன் நடிப்பில் அடுத்து வெளியாகும் படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து சண்முக பாண்டியன் உச்ச நடிகராக வலம் வர வைக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள் என விஷால் சண்முக பாண்டியன் உடன் இணைந்து நடிக்க தயார் என பேசியதற்கு மக்கள் பதிலளித்த வருவதை பார்க்க முடிகிறது.