விஷாலினால் மானம் மரியாதை போச்சு… சோகத்தில் மூழ்கிய பிரபல நடிகை.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஷால், நடிகர் சங்க பொதுச்செயலாளராக ஆன பின்பு, நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்பு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்தார், ஆனால் நடிகர் விஷால் தற்போது 45 வயதை கடந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடமும் கட்டி முடிக்கப்படவில்லை, அவருடைய திருமணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.

இதற்கு முன்பு நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை நீண்ட வருடம் காதலித்து வந்த விஷால், பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.அதன் பின்பு பல நடிகைகளுடன் கிசுகிசுகள் விஷால் சிக்கி வந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரின் மகளுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, திருமணம் பாதியிலே நின்றது.

இந்நிலையில் நடிகை அபிநயா மற்றும் விஷால் இருவரும் காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் ஓன்று வைரலாகி வருகிறது. நடிகை அபிநயா நாடோடிகள், ஈசன் போன்ற படங்களில் நடித்தவர். இவர் தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகின்றனர். தற்பொழுது மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் விஷாலின் மனைவியாக அபிநயா நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இவர்கள் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது, விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஒரு செய்திகள் பரபரப்பாக வெளிவந்தது. ஆனால் இந்த செய்தியை அபிநயா தரப்பில் மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கும் விஷாலுக்கும் வயது வித்தியாசம் அதிகம் அப்படி இருக்கையில், இதுபோன்ற செய்திகள் என்னை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளது என்றும், இதனால் தன்னுடைய உறவினர்கள் மத்தியில் என்னுடைய மானம் மரியாதை போச்சு என்று சோகத்தில் தனக்கு நெருக்கமானவர்களிடம் அபிநயா புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஷால் தரப்பிலிருந்து கூட படத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்ற செய்திகளை வதந்திகளை பரப்பியிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது, மேலும் விஷால் இதுபோன்ற செய்யக்கூடியவர் தான் என்கின்றது சினிமா வட்டாரங்கள்.