தந்தை முகத்தில் கரியை பூச அஜித்தை தேடி சென்ற விஜய் மகன்… அஜித் என்ன சொல்லி அனுப்பி விட்டுள்ளார் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் சினிமா பயணத்தை ஆரம்பிக்க அவரது தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் உறுதுணையாக இருந்தார். அப்பாவின் உதவியால் ஆரம்பித்த விஜய்யின் திரைப்பயணம் இப்போது எங்கேயோ இருக்கிறது. அவரது நடிப்பில் விரைவில் லியோ என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது, வரும் அக்டோபர் மாதம் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது,

ஆனால் உறுதியாகவில்லை. இந்த நேரத்தில் தான் விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து செய்திகள் வலம் வருகின்றன. சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறாராம், அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. விஜயின் மகன் படத்தை‌ இயக்குவதால் அந்த படத்தில் நமது தளபதி விஜய் தான் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சித்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியை நீக்கி விட்டு அந்த இடத்தை பிக்பாஸ் நாயகன் அரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அவர்களை பின் தள்ளி விட்டு தற்போது சஞ்சயின் படத்திற்கு கவின் நடிக்கவுள்ளாராம். இதுவும் நடிகர் விஜயிற்காக ஒப்புக் கொண்டுள்ளாராம் போன்ற தகவல்கள் பரவியது. இந்நிலையில் தளபதி விஜயின் மகன் அஜித்திடம் சென்று தனது படத்திற்கு நடித்துக் கொடுங்கள் என்று கேட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தற்போதைய ரசிகர்களை மொத்தமாக இரண்டே வகையாக பிரித்து விடலாம். தல – தளபதி ரசிகர்கள். இந்த லிஸ்டுக்கு கீழே வரும் ரசிகர்கள் தான் மற்ற ஹீரோக்களையும் ரசிக்கிறார்கள். ஆரம்பத்தில் வெறும் ரசிகர்களாக மட்டுமே இருந்தவர்கள் தற்போது வெறியர்களாக மாறி போனதற்கு சமூகவலைத்தளங்களும் ஒரு காரணம் தான்.

சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமானது தான். தீடீரென்று இவர்கள் அடித்துக் கொள்வார்கள். திடீரென்றே இவர்களே ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இந்த வருடம் இவர்கள் இருவரும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்து இவர்களின் ரசிகர்கள் பெரிய அளவில் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தளபதியின் மகன் அஜித்திடம் தன்னுடைய படத்தில் நடிக்க கூறியுள்ளார். சஞ்சய் தற்போது தான் சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். ஆனால் அஜித் அனுபவம் வாய்ந்தவர்களுடன் மட்டுமே நடிப்பார். எனவே நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். உங்களின் அடுத்தடுத்த படங்களில் வாருங்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறுகிறாராம்.

இதனால் மன வேதனை அடைந்த சஞ்சய் லைக்காவிடம் சென்று கூறியுள்ளார். லைக்கா உம் தல அஜித்திடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் சம்மதிக்க வில்லையாம். ஆனால் கண்டிப்பாக ஒருநாள் என்னுடைய படத்தில் அஜித் நடிப்பார் என்று சஞ்சய் உறுதியாக இருக்கிறாராம். இந்த விஷயம் எல்லாம் தெரிந்த தளபதி அமைதி காத்தாராம். தளபதியின் எதிரியாக கருதப்படும் தலையிடம் சென்ற பல்பு வாங்கிய வந்துள்ளார் அவரின் மகன்.

மேலும் தன்னுடைய மகன் ஒரு நாள் சாதிப்பார் என்ற நம்பிக்கையில் தளபதி விஜய் இருக்கிறாராம்.
ஜேசன் சஞ்சய் அவரது தந்தை போல் நடிகராக வருவார் என்றுதான் முதலில் பெரும்பாலானோரால் கருதப்பட்டது. ஆனால் கேமராவுக்கு முன் நிற்பதைவிட கேமராவுக்கு பின் இருப்பதை அவர் விரும்பிவிட்டார். இருந்தாலும் விஜய்யுடன் அவர் போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படங்களின் பாடலில் தோன்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.