விஜய் எவ்வளவு சொல்லியும் கேட்காத மகன் சஞ்ஜய்….எதற்கு இந்த பிடிவாதம்… அப்பாவுக்கு தெரியாதா.?

0
Follow on Google News

நடிகர் விஜய் – சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய் என்கின்ற மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள், இதில் மகன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா தொடர்பான பட்ட படிப்பை முடித்துள்ளார். அவர் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே சில குறும்படங்களையும் இயக்கி, அந்த குறும்படம் மிக பெரிய வரவேற்பை பெற்று, புலிக்கு பிறந்தது பூனையாகுமா என சஞ்சய் விஜய் பலரின் பாராட்டை பெற்றார்.

இந்த நிலையில் சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா, இதற்கு முன்பு விஜய் மகன் சஞ்சய் இயக்கி நடித்த குறும்படத்தை பார்த்துவிட்டு அவரை மனதில் வைத்து கதை ஒன்றை தயார் செய்துள்ளார், இந்த படத்தில் சஞ்சய் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், விஜய்யை சந்தித்து படத்தின் கதையை தெரிவித்தவர், இந்த படம் உங்கள் மகனை மனதில் வைத்து தான் நான் உருவாக்கியுள்ளேன் என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போக, உடனே மகனை தொடர்பு கொண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகுவது குறித்து பேசியுள்ளார். ஆனால் அதற்கு சஞ்சய் தனக்கு ஹீரோவாக நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்தவர், மேலும் தன்னுடைய ஒரே விருப்பம் இயக்குனராக வேண்டும் என்பதுதான் என்று தன்னுடைய விருப்பத்தை சஞ்சய் தெரிவித்துள்ளார். விஜய் எவ்வளவோ பேசியும் கூட சஞ்சய் மறுத்து விட்டார்.

இந்த தகவலை சுதா கொங்கராவுக்கு விஜய் தெரிவித்துள்ளார், ஆனால், அவர் சார், ப்ளீஸ் உங்கள் மகனுக்காக உருவாக்கிய கதை, நீங்க தான் உங்க மகனிடம் பேசி சம்மதம் வாங்க வேண்டும் என தெரிவிக்க, விஜய்யும் மகனை கன்வின்ஸ் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் ஆனால் அது முடியவில்லை. இதே போன்று விஜய் மகன் சஞ்சய்க்கு பல பட வாய்ப்புகள் தொடர்ந்து தேடி வந்து கொண்டே இருக்கிறது.

தெலுங்கில் மிக பெரிய வெற்றி பெற்ற உப்பெண்ணா தமிழ் ரீமேக்கில் விஜய்யின் மகன் சஞ்சய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது, இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் சஞ்சய் ஹீரோவாக நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் விஜய் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி, அதில் விஜய் மகன் சஞ்சய் மறுத்து விட்டார்.

இந்நிலையில் மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க தந்தை விஜய் எவ்வளவோ சொல்லியும் கேட்காத சஞ்சய் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருப்பதால், விரைவில் இயக்குனராக சினிமாவில் விஜய் மகன் சஞ்சய் அறிமுகவார் என எதிர்ப்பார்க்க படுகிறது.