விஜய் ஆசைக்கு ஆப்பு வைக்க இருக்கும் தந்தை …. எப்படி எதிர்கொள்ள போகிறார் விஜய்…

0
Follow on Google News

விஜயின் இன்றைய அரசியல் நகர்வுகளை கடந்த சில வருடங்களுக்கு முன்பே மிக தீவிரமாக எடுத்து வைப்பதற்கு ஏற்பாடு செய்தவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். ஆனால் அப்போதைக்கு தனக்கு அரசியல் வேண்டாம் என விஜய் விலகி நிற்க, ஆனால் விஜய் அரசியலில் இறங்க இதுதான் சரியான தருணம் என்கிற முடிவுக்கு வந்த அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய் சினிமாவில் ஒரு பக்கம் நடித்து கொண்டே இருக்கட்டும், நான் அவருக்கான அரசியல் பணிகளை செய்கிறேன், விஜய் நேரடியாக அரசியல் இறங்காமல் சினிமாவில் கவனம் செலுத்தட்டும், அரசியல் கட்டமைப்பு விருச்சமாக வளர்ந்ததும் விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்தால் போதும், இதனால் அவருடைய சினிமா கேரியர் எந்த விதத்தில் பாதிப்பு அடையாது என்கிற திட்டத்தில் விஜய்யின் அரசியல் நகர்வுகளை செய்து வந்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இதனால் விஜய் மற்றும் அவருடைய தந்தைக்கு இடையில் மோதல் ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்றது பலரும் அறிவார்கள். அதன் பின்பு தந்தையை ஒதுக்கி வைத்த விஜய், அவர் தந்தை இருக்க வேண்டிய இடத்தில் புஸ்ஸி ஆனந்தை கொண்டு வந்து, நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் நகராட்சி தேர்தலில் தன்னுடைய மக்கள் மன்ற நிர்வாகிகளை களம் இறங்கி அரசியலில் ஆழம் பார்த்தார் விஜய்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவது கிட்ட தட்ட உறுதியான நிலையில், இன்று விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு விதையை நட்டு, அதற்கு உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி, அவர் வளர்த்த மரம் என்று விருச்சகமாக வளர்ந்து பழம் பழுதுள்ள நிலையில், அந்த பழத்தை புஸ்ஸி ஆனந்தை வெட்டி எடுத்துவா நான் சாப்பிட வேண்டும் என்பது போல் உள்ளது விஜய் அவருடைய தந்தையை ஒதுக்கு வைத்துவிட்டு, புஸ்ஸி ஆனந்தை அருகில் வைத்து அரசியல் செய்வது என்கின்றனர் விஜய்யின் நலம் விரும்பிகள்.

இந்நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் நடத்திய அவருடைய விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பின் போது, அவருடைய ரசிகர்ககளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழக்கியுள்ளார், அதில் முதலில் தாய் தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்க, அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள் என்று விஜய் அவருடைய மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜயின் இந்த பேச்சு மிக பெரிய விவாதமாக இன்று உருவெடுத்துள்ளது. விஜய் இன்று மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஆனால் அவரே அவருடைய தந்தையை ஒதுக்கி வைத்து விட்டு, புஸ்ஸி ஆனந்த் சொல்வதை கேட்டு தலையாட்டி கொண்டிருக்கும் விஜய் முதலில் அவருடைய தந்தையை அரவணைத்து செல்ல வேண்டும், அதன் பின்பு அவருடைய ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்கிற கேள்வி விஜயை நோக்கி திரும்பியுள்ளது.

அதே நேரத்தில் விஜய் அவருடைய தந்தையை அருகில் மீண்டும் அணைத்து கொண்டால் அவருடைய அரசியல் வளர்ச்சிக்கு மிக பெரிய துணையாக இருப்பது மட்டுமில்லாமல், விஜய் மற்றும் அவருடைய தந்தை இடையிலான பிரிவு என்பது அவருடைய அரசியல் நகர்வுகளுக்கு அதுவே மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இந்த விவகாரமே விஜய் அரசியலுக்கு எமனாக மாறலாம் என எச்சரிக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.